STORYMIRROR

Abinaya Devi

Drama Romance Others

3  

Abinaya Devi

Drama Romance Others

இதயத்தை கொள்ளை கொண்ட கள்வன்

இதயத்தை கொள்ளை கொண்ட கள்வன்

2 mins
8

அத்தியாயம்: 1 




சொக்கநாதபுரம் - எழில் கொஞ்சும் பச்சை வயல்கள், வானுயர்ந்த தென்னை மரங்கள் என ஒரு ஓவியம் போல இருக்கும் கிராமம். 

அந்த ஊரின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் சக்தி கொண்ட குடும்பம், ஊர் தலைவர் ராஜாவின் குடும்பம்.

அந்த மாளிகையைப் போன்ற வீட்டில் மூன்று சிங்கங்களுக்கு (ராஜா, வெற்றி, கதிர்) நடுவே ஒரு சிறு குயிலாக வளர்ந்தவள் தான் ஆதிரா. 17 வயதிலேயே அவளுக்கு இருக்கும் துணிச்சலும், அவளது இளவரசி போன்ற தோற்றமும் ஊருக்குள் ஒரு தனி மரியாதை. 

ஆனால், அவளது இதயம் மட்டும் யாரிடமும் சிக்காமல் சென்னையில் சிறகடித்துக் கொண்டிருந்தது.

அவளது இதயத்தை திருடிய அந்த கள்வன் - ருத்ரன்.

பேருந்து பயணம் மற்றும் ரகசியப் பார்வை:

மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை - சொக்கநாதபுரம் செல்லும் அந்த அரசுப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தாள் ஆதிரா. 





அவளது பக்கத்து சீட்டில், ஒரு புத்தகத்தைப் படிப்பது போல பாவனை செய்தபடி, அவளது அழகை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

பேருந்து ஊர் எல்லையை அடைந்தபோது, ஆதிராவின் அண்ணன் கதிர் தனது காரோடு காத்திருப்பதை கண்டனர்.

"ருத்ரன்... அண்ணன் நிக்கிறாங்க. நான் போறேன். கவனமா இருங்க," என்று கண்கள் பேச, உதடுகள் அசையாமல் விடைபெற்றாள் ஆதிரா.

எப்படி இருக்க பாப்பா..." என்று கதிர் அவளை அணைத்துக் கொண்டபோது, தூரத்தில் நின்ற ருத்ரனின் கண்கள் ஒரு நொடி சிவந்தன. 

அது பொறாமை அல்ல, தன் காதலி தன் எதிரியின் தங்கையாக இருப்பதை எண்ணிய ஒரு இயலாமை.

என்னடா மா இப்படி ஆளே உடைஞ்சி போயிட்ட.... ஹாஸ்டல்ல நல்லா சப்டுறாயா இல்லையா என்று கதிர் கேட்க, 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணே நான் நல்லா தான் சாப்டுறேன் என்று ஆதிரா கூறினாள்.....

சரி வா.... வீட்ல எல்லாரும் உனக்காக எதிர் பாத்துட்டே வேற இருப்பாங்க என்று கதிர் கூறி ஆதிராவை வீட்டிற்கு அழைத்து வந்தார்....

ருத்ரனும் சற்று நேரத்தில் அவனது வீட்டிற்கும் புறப்பட்டான்...

ஆதிரா அவளது வீட்டிற்கு வந்திருக்க.... அவளது வீடே ஒரு விழாவை போல இருந்தது.... 


மறுநாள் காலை, விடியும் முன்பே சொக்கநாதபுரம் துயில் எழுந்தது. 

ஆதிரா, இளநீல நிறத் தாவணியில் தேவதையாகத் தயாராகி, தனது ஸ்கூட்டியில் ஊர் எல்லையைத் தாண்டினாள்.

அண்ணி ரேணுகாவிடம் 'பக்கத்து கோவில்' என்று பொய் சொல்லிவிட்டு, அவள் பறந்தது சோலைவனத்திற்கு!
அங்கே, அரச மரத்தடியில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ருத்ரன்.




"என்னடி... தாவணியில இன்னைக்கு என் உசுரை எடுக்குற?" என்று அவன் வம்பிழுக்க, ஆதிரா வெட்கத்தில் சிவந்தாள்.

"சார்... ப்ரொபசரா காலேஜ்ல மட்டும் இருங்க. இங்க நீங்க என் கள்வன் தான். வாங்க சாமி கும்பிடலாம்," என்று அவனது கையைப் பிடித்துக் கோவிலுக்குள் இழுத்துச் சென்றாள்.

அதிர்ச்சியான திருப்பம்:
இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு, கோவிலின் பின்புறம் இருக்கும் குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மூன்று வருடப் பிரிவு, சொல்லாத கதைகள் என நேரம் போனதே தெரியவில்லை.
"ருத்ரன்... நம்ம ஊர் பிரச்சனை எப்ப தான் தீரும்? உங்க குடும்பத்துக்கும் எங்க அண்ணன்களுக்கும் ஏன் இவ்வளவு ஆகாது?" என்று ஆதிரா வருத்தமாகக் கேட்டாள்.

ருத்ரன் பதில் சொல்ல வாயெடுத்தபோது, அவனது நிழலுக்குப் பின்னால் ஒரு பெண் உருவம் வந்து நின்றது.
ஆதிரா மெல்லத் தலைநிமிர்ந்து பார்த்தாள். 

வந்த பெண்ணைப் பார்த்ததும் ஆதிராவின் ரத்தம் உறைந்தது. அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. 


அடுத்த பாகத்தில் பார்ப்போம் ❤️


Rate this content
Log in

Similar tamil story from Drama