R.ROOBESH KUMAR

Romance Tragedy Others

3  

R.ROOBESH KUMAR

Romance Tragedy Others

இரட்டைக் கோடு

இரட்டைக் கோடு

1 min
180



     குமரனுக்கு 18 வயது ஆகிறது. அரசு கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு படிக்கிறான் .

    கல்லூரி சேர்ந்த முதல் மூன்று மாதம் ஒழுங்காக கல்லூரிக்கு சென்று வந்தான் . அவன் தினமும்

   அரசு பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வருவான் . பிறகு ஒரு நாள் அவன் வழக்கம் போல் செல்லும்

    பேருந்து அன்று வரவில்லை . அடுத்த பேருந்துக்காக நின்று கொண்டிருந்தான் . அப்போது 

   தான் சோனியாவை முதல் முறையாகப் பேருந்து நிலையத்தில் காண்கிறான் . அவள் அரசு பள்ளியில்

   12ம் வகுப்பு படிக்கிறாள் . அவளை பார்த்தவுடன் அவன் மீது ஒரு குளிர் காற்று வீசுகிறது அவனை

   மறந்து அவள் முகத்தை கண்டு ரசிக்கிறான் , இன்பம் கொல்கிறான் . இது வரை இது போல் ஒரு 

   இன்பத்தை அவன் வாழ்க்கையில் அவன் கண்டதில்லை . அப்போது அவன் நினைத்து கூட 

   பார்த்து இருக்க மாட்டான் . இந்த நாளில் இருந்து அவனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் நடக்குமென்று ?

  அன்றிலிருந்து தினமும் அவன் வழக்கமாக செல்லும் பேருந்தை விட்டு விட்டு சோனியா செல்லும்

   பேருந்தில் செல்ல ஆரம்பித்தான் . எதாவது சேட்டைகள் செய்து அவளை திரும்பி பார்க்க வைப்பான்.

   இது வரைக்கும் இளம் பெண்களிடம் பேசவே பயந்தவன் அவளிடம் எப்படியாவது பேசவெண்டும்

  என்று துடித்தான் . பல முறை அவளிடம் பேச முயற்சித்தான் போய் சென்று பேசவும் செய்தான்.

  அவள் திரும்ப அவனிடம் பேசவில்லை . ஆனாலும் குமரன் அவள் பின்னே சுற்றினான். 


  சில நாட்களுக்கு பிறகு ........


   காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது . அந்த 10 நாட்கள் விடுமுறையில்

   அவளை குமரன் பார்க்கவில்லை . அவன் மனது மிகவும் ஏக்கதுடன் இருந்தது . குமரன் மிகவும்

   துடித்து போனான் . அப்போது தான் முடிவு செய்தான் அவளுடன் வாழ்நாள் முழுவதும் 

   வாழவேண்டும் என்று.....

   அன்று முதல் அவளை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தான் ..................................................................................



Rate this content
Log in

Similar tamil story from Romance