வாழ்க்கை மேற்கோள்கள்
வாழ்க்கை மேற்கோள்கள்
கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது என் கவலை தீரும் வரை
உறவுகள் எனக்கு பிடிக்கும்
அது உரிமையாக இருக்கும் வரை
உன்னை எனக்கு பிடிக்கும்
என் உயிர் உள்ள வரை.
உன் மார்போடு சாய்ந்து
முத்தம் பதித்து
என் நெஞ்சோடு உன் முகம் பதித்து
கொள்ள தவம்கிடக்கிறேன்.
உன் முகம் காணாத எனது ஏக்கம்
நீ அறிவாயோ
உன் விழிகளை காணும் வரை
என் கண்ணில் ஏது உறக்கம்!
நேசம் தாண்டியும்
உன்னிடம் எதோ ஒன்று இருக்கிறது.
தீண்டல்கள் இன்றி,பார்வைகள் இன்றி
மௌனத்தை மொழியாக்கி
உன் அன்பை எனதாக்கி
இறுதிவரை உன் அருகில்
நான் வாழ வேண்டுமடா.