ஓரு நாள் கூத்து
ஓரு நாள் கூத்து
பத்து பேர் வந்து பெண் பார்த்து,
அதில் ஓருவருக்கு பிடித்து,
சொந்த பந்தங்களை அழைத்து மாப்பிள்ளை வீட்டில் கை நினைத்து,
திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயம் முடித்து,
இந்த மூன்று மாதத்திற்குள்
சொந்த பந்தங்கள் அனைவரையும் திருப்பித்திப்படுத்தி,
ஐயரை பார்த்து தேதி குறித்து, கல்யாண மண்டபம் பார்த்து, பத்திரிகை அடித்து,
தாம்பூலம் கொடுத்து, அனைவரையும் திருமணத்திற்கு அழைத்து,
மணப்பெண்ணுக்கு மாங்கல்யம், தங்க நகை, பட்டு புடவை, சீர்வரிசை என பார்த்துப் பார்த்து வாங்கி,
திருமண விழாவாக, பந்தக்கால் நட்டு, மாப்பிள்ளை அழைப்பு என தொடர்ந்து, மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் வரை பல லட்சங்களை செலவு செய்து செய்யும் இந்த ஓர்நாள் கூத்து தேவையா?