நமசிவாயம்
நமசிவாயம்


சிரசில் கங்கை சிவனின் லீலை
அரவம் கழுத்தில் அதுவே மாலை
உடலில் பாதியே உமையாள் மீதி
அடங்குமே எல்லாம் அம்மான் நீயே
முக்கண் ணுடையவன் முடிவில் லாதவன்
இக்கண் போதுமோ இறைவனைக் காண
எப்பிற விவேண்டுமோ என்னப்பன் காண
இப்பிற விபோதுமே இறைவா அருளவே