நாணயம் !!!
நாணயம் !!!
காசு மட்டும் போதுமா கையிலே !!
பாசம் என்ன நேசம் என்ன உலகிலே
இனமென்றும் குலமென்றும் பேசுவார்,
கையில் இருந்தால்தான் விசிறி கொண்டு வீசுவார்
பணம் இருப்பவன் வீட்டில் புகழ் பாடி பேசுவார்,
இல்லாதவன் வீட்டில் நாய் !! பேய்!! என்றும் ஏசுவார்
பணம் வரும்போது உன் கண்களும் மயங்கி விடும்,
அதை செலவழித்த பின்புதான் சித்தர் ஞானம் பிறந்துவிடும்,
உழப்பினிலே வாழ்த்து வந்தால் உயர்த்திவிடும்
பணம் இல்லாதோர் நிழல் என்று மறைத்துவிடும்...