முற்றும்
முற்றும்
கண்ணிற்கெட்டா கானலது..
சாயம் மாறா காயமது...
மண்ணில் தோன்றா மாற்றமது..
எவரும் ஏற்கா விருப்பமது...
வேண்டாமெனினும் வருவதது...
சாப வரத்திற்கு பிறந்ததது..
ஆதி இருப்பின் அந்தமாவது..
முடிவிலும் முடியாது
தொடராகும் ஒரு நிஜமாக...
முடிந்ததும் தொடரும்
முற்றுப்புள்ளியான முடிவு.