முற்றும் இரயில் பயணம்
முற்றும் இரயில் பயணம்
மயக்கும் மண் வாசனை நுகரும் ஜன்னலோர மனங்கள்.
இணையா ரயில் பாதையை சிலாகித்து பார்க்கும் படிகட்டின் இரு மனங்கள்.
பின்னோக்கி ஓடும் மரங்களை ரசித்து மகிழும் குழந்தை மனங்கள்.
இதான் பயணமா என புரியாமல் அரியாமல் ஆர்பரிக்கும் கடவுளின்(குழந்தை) மனங்கள்.
பதட்டத்தோடும் இனம் புரியா பிரம்மிப்போடும் ரயிலை ரசிக்கும் முதல் ரயில் பயணம் செய்யும் மனங்கள்.
தொடர்பில்லா ஆயிரம் மனங்களை சுமக்கும் தொடர் வண்டியின்,
சேரும் இடத்தில் முற்றும் என
இரவு நேர தொடர் பயணத்தை முடிக்கும்
அந்த கணத்தில் இருந்து தொடங்குகிறது
அந்த ஆயிரம் மனங்களில்
ஆயிரம் ஆயிரம்
பயணங்கள்.