மனங்களை மாற்றுவோம்
மனங்களை மாற்றுவோம்
எலும்புகளை சமைத்து
"சமத்துவம்" கொண்டாடி
என்ன பயன் ..?
இமைகளை காயப்படுத்தி
விழிகளை உறங்கச்சொல்லி
என்ன பயன் ..?
பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை சேதப்படுத்திய பின்பு
பூக்களை தூவி
என்ன பயன்...?
இதயங்களை கிழித்தபிறகு இறைவார்த்தையை உச்சரித்து
என்ன பயன் ..?
அகிம்சையை புதைத்துவிட்டு
அமைதியான அயோத்தியில்
ராமனை உயிர்ப்பித்தும்
பாபரின் உயிர்பிரித்தும்
என்ன பயன் ..?
மனங்களை மாற்றாமல்
மதங்களை மாற்றி
என்ன பயன்..?
மனதின் கறைகளை
கழுவி அனனத்தில்
அப்பிக் கொண்ட..
அந்தகாரத்தின் கருமையை
உறிஞ்செ றிந்து
வெளிச்சத்தை உமிழும்
இரவியாய் ஒளிர்ந்து
மனிதத்தை காத்திடுவோம்...!
தூரா.துளசிதாசன்
