உயிர்த்துளி
உயிர்த்துளி
மண்ணின் தாகம்
தீர்த்திட
மேகத்தாயவள் வரமளிக்கும்
தாய்ப்பால்....
கார்மேகக் குவியலில்
புதைந்து கிடக்கும்
வைரத்துளிகள்....
உழவனின்
கண்ணீரை துடைக்கின்ற
விண்ணில் விடைபெறும்
உயிர்த்துளிகள்....
ஏழையின் இல்லக்கறைகளையும்
கோமானின் உள்ளத்தின்
கறைகளையும் துவைக்கின்ற
புனிதத் துளிகள்....
மரணிக்கும் மரங்களின்
வேர்ப்பைகளில்
வந்து விழுகின்ற
ஒரு துளி அமிர்தம் ...
வறண்டு போன
நீரகத்தின் நாவினை
நனைக்கின்ற
பன்னீர்த்துளிகள்....
தெருவெங்கும் வீணாகும்
உயிர்துளியாம்
மழைத்துளியை
சேமிப்போம் நாளும்
நிலத்தடி நீர்உயர்த்தி
நீடு வாழ்வோம் நாமும்....
