மகிழ்ச்சியின் வண்ணங்கள்
மகிழ்ச்சியின் வண்ணங்கள்
தினமும் காலை நேரத்தில் உங்களை காண வருகிறேன்,
உங்கள் அனைவரையும் ஒன்றாக காண என் மனம் ஏங்குகிறது,
ஒவ்வொரு தினமும் உங்களின் வளர்ச்சியை காண தவிக்குது என் மனம்,
கையில் இருக்கும் தண்ணீர் குடம் எத்தனை முறை இங்கு உங்களுக்கு நீரை ஊற்றிருக்கும்,
அத்தனையும் உங்களின் பல வண்ண பூக்களை காண தானே.
என் வீட்டின் தோட்டத்தில் பல வண்ண பூ சேடிக்கள் வளர்ப்பது மனதிற்க்கு மகிழ்ச்சி,
இளமை வாழ்வில் காணாத வண்ணங்கள் இன்று முதுமையில் உங்கள் வாயிலாக காண ஒரு ஆசை,
தனிமையில் தவிக்கும் இந்த பதுமைக்கு பூ சேடிகள் வளர்பதுதான் ஒரே வேலை,
பூவின் வாசம் கூட இன்னும் சில காலமே நுகர முடியும் என்னாள்,
ஆனாலும் உங்களின் வண்ணங்கள் என்னை சூழும் போது என் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு ஆளவில்லை.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை ரோஜாகளும்;
நில,வெள்ளை சங்கு மலர்களும்;
மஞ்சள், ஊதா நிற செவ்வந்தி பூவும்,
செம்மஞ்சள், பவள நிற பூக்கள் உங்கள் அனைவரையும் ஒன்றாக காண ஏங்குகிறேன்,
மருநாள் காலை போழுதுதில் விழித்தவுடன் நான் வந்தேன் உங்களை காண,
கண்டேனே நான் உங்கிள் வண்ண அணிவகுப்பை,
என் மனமும் மகிழ்ச்சியில் திகைத்து போனது இன்று.