காத்திருப்பு
காத்திருப்பு
வானமே வானவில்லாய் மாறிட விரும்பும்..
சூரியச் சிவப்பும் பொறாமையில் ஒளிதனைப் பெறுக்கும்..
நிலவும் கருவிழி வேண்டித் தவம் செய்யும்..
எட்டாவது இசை இசைத்தமிழில் சேர
இசையும்..
தென்றலும் சுவாசிக்கக் கற்றுக்
கொள்ளும்..
மலர்களும் மணம் பரப்ப
மறக்கும்..
தேனீக்களும் தேன் கொள்ள வெறுக்கும்..
குயிலிசைக்கு செவி சாய்க்க காற்று
மறுக்கும்..
முத்துக்களும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்..
தாமரையும் விரியத் தயக்கம்
காட்டும்..
இடையினமும் இலக்கணம்
இழக்கும்..
ஆழிக்கிணறும் உயிராழம் கண்டு
பயக்கும்..
வாழையும் தன்வனப்பினை மெருகேற்ற
.விழையும்..
கடலலையும் கரை தாண்டாமல் விலகிச் செல்லும்..
உவமைகள் பலவும் உருவகங்கள் ஆகும்..
உணர்ந்தவன் மட்டுமல்ல...
கண்டுணர விரும்பும் மனமும்
கவி வரையும்..
அஃறிணை
'அது' காதல்..
உயிரிணை
'அவள்' காதலிற்கு
காத்திருந்தால்!!!