காதல்
காதல்
கடவுளும் ஆசைப்படும்
உணர்வு
காதல்!
என்று வரும்,
எப்படி வரும்,
வருமா...
என்று ஏங்க
வைப்பது
காதல்!
ஒலி இல்லாமல்,
மொழி இல்லாமல்,
பேச வைப்பது
காதல்!
காதலுக்கும் வயசில்லை.
காதலிக்கவும் வயசில்லை.
மோதல் இல்லாத காதலில்லை.
ஊடல் இல்லாத காதலில்லை.
தட்டிக்கொடுத்து வெல்ல வைப்புதும்
காதல்,
வெட்டியாய் சுற்றி சுற்றி வருவதும்
காதல்
தட்டி ,தாலாட்டி தூங்கவைப்பதும்
காதல்,
பாராட்டி முன்னேற வைப்பதும்
காதல்.
பாட்டுப் பாட வைப்பதும்
காதல்,
' பாட்டில் ' எடுக்க வைப்பதும்
காதல்.
பரிணாமம் இல்லாத காதல்...
கற்பனையிலும் காதலிக்கலாம்,
காகிதத்திலும் காதலிக்கலாம்,
பார்க்காமலும் காதலிக்கலாம்,
கேட்காமல் காதலிக்கலாம்,
தொடாமலும் காதலிக்கலாம்,
தூர இருந்தும் காதலிக்கலாம்.
வாழ்கையை காதலிப்போம்...
விரும்பும் காதல் தன்னால் வரும்!
அன்புடன்
அவை மோகன்குமார்

