இனியும் தாமதிக்காதே
இனியும் தாமதிக்காதே
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
இறைவா இறைவா இறைவா
இனியும் அமைதி காக்காதே
சாரை சாரையாய் எறும்பு. ஊறும் அறிவோம்
ஆனால் சாரை சாரையாய் மனிதர்கள் மடிவது எங்கனம்?
இறைவா உன் கண்களை திறந்து விடு கருணை காட்டி விடு
மழலை அழுகுரலைக் கேட்டுவிடு
மன்றாடி நிற்கின்றோம்
மனமிரங்கி விடு
உலகாலும் இறைவா
உன் இரக்கம் எங்கே?
இது நாடா வெறும் சுடுகாடா?
ஏன் ?இந்த அவலம்
கருணை மழையைப் பொழிந்து விடு கடமை தவறாதே நீயும்
கவனக்குறைவால் மனிதநேயம் இழந்தோம்
இனி நாங்கள் திருந்திட
நற்பணி செய்திட ஒரு நல்வாய்ப்பு நல்கிடு.
இறைவா தஞ்சம் என்று உன்னை அடைந்தோம்
தலைவாகாத்திடு எமை பார்த்திடு
உன்னை விட்டால் யார் எமக்கு இவ்வுலகில் உள்ளார்
இனியும் தாமதிக்காது இறைவா விரைந்திடு
இனியும் தாமதிக்காதே