STORYMIRROR

Lakshminarasimhan Subbarao

Abstract

4  

Lakshminarasimhan Subbarao

Abstract

எப்படிப்பா இருக்கே

எப்படிப்பா இருக்கே

1 min
319

யாவரும் கேளிர் என்றும்

யாவரும் நலம் என்றும்

நலம் நலம் அறிய அவா என்றும்

சௌக்கியமா என்றும்

ஐயமிட்டு உண் என்றும்

தேர் கொடுத்தும்

மனுநீதி காத்தும்

தமிழ் வளர்த்தும்

வாழ்ந்தோம் வளர்ந்தோம்

இன்று வாட்சாப்பில்

பேசும் நாம் அடுத்தவர்

மனநிலை அறிய மறந்து அனைத்திற்கும்

அவசரமாக பதில் நோக்கி காத்திருக்கிறோம்

ஒரு வேளை அலைபேசி அழைத்தால்

மொக்கை போட அழைக்கிறார் என்கிறோம்

உடல்தளர்ந்து மறதி வந்து யாராவது 

பேச மாட்டார்களா என்று வரும் காலம்

அதை மறந்து இன்றைய பொழுதைக் கழிக்கும்

அலை பேசி மனிதனே மனிதம் மறக்காதே

சங்கம் வளர்த்தத் தமிழைப் படி

ஆன்றோர் மொழியில் வாழப் பழகு

மனிதம் இன்றி எந்த செயற்க்கை அறிவும்

இறுதியில் மனிதனிடம் தோற்க்கும்

அவனுடைய போராட்ட குணத்திடம்..


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract