STORYMIRROR

Lakshminarasimhan Subbarao

Drama

3  

Lakshminarasimhan Subbarao

Drama

என் மகளாய்

என் மகளாய்

1 min
183

வடித்தச் சோற்றைக் கண்ட எளியனாய்

இறையின் முழு உருவம் கண்ட பக்தனாய்

தமிழின் இனிமை சுவைத்த பாரதியாய்

கொடியை வருடிய மெல்லிய தென்றலாய்

கண்ணிற்கு இனிய பசுமைக் காட்சியாய்

மண்ணில் விளைந்து வளைந்த நெற்கதிராய்

முதுகில் விழும் அழகிய அருவியாய்

காலைப் பொழுதின் வீதியின் நிசப்தமாய்

வஞ்சப்புகழ்ச்சியில் திளைக்கும் மானிடராய்

மனதில் உதிர்த்த முதல் காதலாய்

வகுப்பில் கிடைத்த முதல் பாராட்டாய்

கடற்கரை மணலில் கால்களைப் புதைக்கும் நீராய்

கைகளில் ஏந்திய அவ்விநாடி

உன் மெல்லிய கரங்கள் பற்றினாய்

புவியில் இறங்கிய தேவதையே என் மகளானாய்



Rate this content
Log in

Similar tamil poem from Drama