STORYMIRROR

Lakshminarasimhan Lakshminarasimhan

Abstract

4.8  

Lakshminarasimhan Lakshminarasimhan

Abstract

பார்த்தனின் கேள்வியாய்

பார்த்தனின் கேள்வியாய்

1 min
124



மண்ணைத் தின்று உலகைக் காண்பித்த ஐயனே

ஊழ்வினைப் பயனை உலகிற்கு உரைத்து

பார்த்தனின் கேள்வியாய் குருஷேத்திரத்தில் நின்றவனே

என்றும் நிலையான கீதையைப் பதிலாய் தந்து

உலகின் மறையைக் காப்பவனே

பால்ய பருவத்தின் நாயகனாய்

மத்தியமத்தின் வழிகாட்டியாய்

நடை தளரும் காலத்தில் நம்பிக்கையாய்

மானுட கர்மத்தையும் தர்மத்தையும்

உரைத்த சாரதியாய் எம்

உள்ளம் கவர்ந்த கோகுல பாலனை

எண்ணும் போது குசேலனின் செல்வம் போல்

மனம்நிறைந்து மகிழ்ச்சியில் திளைக்குமே...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract