என்னுலகம்
என்னுலகம்
யாராலும் நினைத்திட முடியாத உலகம்,
யாராலும் வாழ்ந்திட முடியாத உலகம்,
யாருடைய கற்பனையிலும் இல்லாத உலகம்,
யாரும் விரும்பிடாத உலகம்,
யாரும் அனுபவிக்காத தனிமை உலகம்,
இனிமையை தொலைத்திட்ட உலகம்,
துன்பம் மட்டுமே சூழ்ந்த உலகம்,
சிரிப்பினை மறந்துவிட்ட உலகம்,
இந்த உலகம்,
எனக்கே எனக்கு சொந்தமான என்னுலகம்,
எதிர்காலத்து மாற்றத்தினையும் ஏற்றுக் கொள்ளும் உலகம்......