என் ஆசிரியர்
என் ஆசிரியர்
வெற்று காகிதமாய் இருந்த
என்னை அழகுமிகு தோரணமாய்
மாற்றியவர் நீர்!..
அம்மா என்ற உறவிற்கு
மறுஉருவமாய் இருந்தவர் நீர்
என் அறிவுபசியை போக்க
உழைத்தவர் நீர்
கல்வி என்னும் அமுதத்தை
தெவிட்டாமல் உண்ணச் செய்தவர் நீர்
ஒளிதரும் மெழுகு தன்னை
உருக்குவது போல்
என் அறிவொளி பெருக
தன்னையே உருக்கியவர் நீர்
வெறும் கல்லாய் இருந்த என்னை
அழகு சிற்பமாய் செதுக்கியவர் நீர்
அன்பில் தாயாகவும்
கண்டிப்பில் தந்தையாகவும்
ஊக்குவிப்பில் நண்பராய்
எனக்கு இன்னுமொரு குடும்பமாய்
இருந்து வழி நடத்தும்
என் மரியாதைக்குரிய ஆசான்களே!..
உங்களுக்கு பல மாணவர்கள் கிடைப்பார்கள்
ஆனால் எனக்கு உங்களை போல்
ஆசான் கிடைப்பதென்று இயலாத ஒன்று..
உங்களின் அறிவுரையும் ஊக்குவிப்பும்
நீங்கள் என்னருகில் இல்லாதபோதும்
அவை என்னை வழிநடத்தும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் மாணவி ஷமீம் பானு.அந
இக்கவிதையை எனக்கு ஆறாம் வகுப்பு முதல் இப்போது வரை அத்தனை ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்💖💖💖....