🌚சந்திரன்
🌚சந்திரன்
சந்திரன்!
இரவுச் சூரியனே!
தாய் தன் மகவுக்கு சோறூட்ட
உன்னைக தானே முதலில் காட்டி சோறூட்டினாள்!!
நிலா நிலா ஓடிவா!
நில்லாமல் ஓடிவா!
என்று உன்னைத் தானே அழைத்தாள் தாய்!
இன்று காலம் மாறிவிட்டது! நிலவே!
அலைபேசியைக் காட்டித் தானே மலைக்கு சோறூட்டுகிறாள்! இன்றைய தாயானவள்!
பிள்ளைகள் ஓடியாடி விளையாடினால் தானே வெளியில் வருவார்கள்! வானத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள்! அவர்கள் அலைபேசியில் அலைபாய்ந்துக்
கொண்டிருக்கின்றனரே!
உன்னை எப்போது காண்பர்?
அவர்களது சுட்டித்தனங்கள் சாதனங்களுடன விலை போய்விட்டது நிலவே!
நிலவே நீ மயங்காதே!
மீட்டெடுப்போம் இளைய தலைமுறையினரை!!!
