ஆ(இயலா) மை
ஆ(இயலா) மை
கடலை விட்டு
வெளியே சென்றால்
காலம் மாறும்
என நம்பி
அலையின் அசைவில்
கரை சென்ற
ஆமை....
தத்தி நடக்க
அதனை மனிதன்
உற்று பார்க்க
மீண்டும் கடலில்
சேர ஆசை
வந்தது...
வெளிநாட்டில் வாழும்
என் மக்களை போல்..
அதற்குள் புளு க்ராஸ்
வந்தது..
பச்சை அட்டை போல..
மீண்டும் வரும்
அந்த ஆமை...
ஏக்கத்தில் பவள பாறைகள்...
