வெற்றி
வெற்றி
வெற்றி என்பது வெளியே இருப்பதல்ல;
அது உனக்குள் இருப்பது !
சரித்திரம் படைக்கப்படும்- நீ
உன் வரலாற்றை தெரிந்திருக்கும்போது;
அது மேலும் விவரிக்கப்படும்- பிறர்
உன் சரித்திரத்தை அறிந்திருக்கும் போது;
செய்யும் தொழிலில் முதன்மை- அதுவே
சாதனையின் உண்மையான உடைமை !
இதையறிந்தவன் என்றும்
இருப்பான் முன்னால்-
அறியாதவன் என்றும் இருப்பான்
பின்னால் !
அறிந்தும் செயல்படுத்தாதவன்
இவ்வுலகில்….
என்றும் இருப்பான்-
வெறும் மண்ணாய்….
வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல;
வியர்வையில் உருகுபவனே
மனிதன்.
வலிகளை வெறுப்பவன்
வெற்றியாளன் அல்ல….
வலிகளோடு வாழ்பவன்
வெற்றியாளன் - வலிகளை
வெல்பவனே சாதனையாளன் !
உயர்ந்தாலும் ஏச்சும்-
தாழ்ந்தாலும் ஏச்சும்-
இவ்வுலகம்: அதை
நீ கண்டு கொள்ளாதே !
பின்னாளில் அவ்வுலகம் உன்னை
கொண்டாடும் ! உன்னை புரிந்துகொள்ள
யாருமில்லை என்ற ஏக்கம்
வந்தாலே நீ வெற்றி பெற
தகுதியானவன் !
நீ வலிகளை தாங்கினால்
வெற்றி வரும் உன் பின்னால்!
பின், புகழ் பெறுவாய்
இவ்வுலகின் முன்னால் !
அப்பொழுது நீ
ஆணவத்தால் திண்டாடக்
கூடாது !
மன உறுதி, மன அமைதியால்
இவ்வுலகை வென்று விட
பிறந்துளீளாய் நீ !
வழிகாட்டி ஏன் வேண்டும்
உனக்கு ? இவ்வுலகை
வழிகாட்ட பிறந்துள்ளதே
நீதானப்பா !
என்னால் முடியாது
என்பது
வெட்டியாக இருப்பது !
என்னால் முடியும் என்பது
சாதிப்பது ! என்னால் முடிகின்றது
என்பதே தற்போது சாதிக்கின்றது!
வாழ்க்கை என்னும் கையை
நீ தான் பாதுகாக்க வேண்டும் !
வேறு யாரும் உன் கையை
தூக்கிவிட மாட்டார்கள் சீக்கிரமாய் !
எனவே,
கைரேகையை நம்பாதே !
உன் கையை நம்பு !
உன் மூளையின் படி
செயல்படு - உன்
இதயத்தின் படி வாழ் !
தோல்வி என்பது தற்காலிகத் தடையல்ல;
அது உனது வருங்கால சாதனை !
வெற்றி என்பது தற்காலிகப் புதிரல்ல ;
அது தற்காலிகச் சாதனை !
ஒரு தடவை வெல்வது எதுவும்
சரித்திரம் ஆவதில்லை - வெற்றி
பெற்றுக் கொண்டே இருக்கும்போது
மட்டுமே அது சரித்திரம் ஆகும் !
கடவுளை அடைவதே உன்
வாழ்க்கையின் இலக்கு !
அதனால்,
கெட்டதை நீ விலக்கு !
நல்லதை நீ பெருக்கு !
உன் தொழில் முதன்மையானவாய்
இருந்தால் அடைவாய் அக்கடவுளை !
மனத் தூய்மை , வெற்றியின் போதும்,
வெற்றிக்குப் பிறகும் சாந்தம்,
இடைவிடாத பெரும் முயற்சி,
இறை நம்பிக்கை, அன்பு இவைகள்
இருப்பவன் மட்டுமே இவ்வுலகில்
புகழுடம்பாக வாழ முடியும் !
மேலுலகு பொது நலவாதிக்கு !
கீழுலகு சுய நல வாலிக்கு !
ஆனால்,
இப்பூவுலகு இருவருக்குமே இல்லை !
அதனால், பயம் கொள்ளாதே எதற்கும் !