Muthukumaran Palaniappan

Romance

5  

Muthukumaran Palaniappan

Romance

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

2 mins
462



 

தன் இளமை காலங்களை மிகவும் குக்கிராமத்தில் இருந்து தொடங்கியவன் . பள்ளி படிப்புகள் அனைத்தும் அரசு பள்ளிகளில் தான் படித்தான். அவன் பெற்றோர்கள் படிக்கவில்லை அவனுக்கு சகோதிரிகள் உண்டு. குடும்பம் மிகவும் கண்ணியமான குடும்பம் அப்பாவிற்கு சொற்பசம்பளம் ஆனலும் குடும்பத்தை சிறப்பாக கொண்டு சென்றார். அவன் தன் சிறுவதில் இருந்து காமத்தை பற்றி பல கோணத்தில் யோசித்துள்ளான் மேலும் அன்றாட வாழ்வில் காமம் எப்படி பார்க்கப்படுகிறது என்று யோசித்தான்.

 

 

   அவனது அனுபவத்தில் உருவானதை இங்கு கொட்டி தீர்த்துள்ளான். பலர் சொல்வார்கள் காமம் என்பது தப்பான விஷயம் மிகப்பெரிய குற்றம் என்று ஆனால் காமம் இல்லாமல் போயிருந்தால் நீயும் இல்லை நானும் இல்லை காமம் ஒரு கெட்ட விசயமாகவே சித்தரிக்கப்படுகிறது. இந்த உலகில் அது வெளியில் பிறர் மூலம் நடந்தால் பெரிய விஷயம் அதுவே வீட்டில் நடந்தால் மூடி மறைக்கப்படும் சாதாரண விசயமாகிறது. முழுக்க முழுக்க காமம் நம் உறவுகளை சுற்றியே இருக்கிறது. வெளியில் இருந்து வருவதில்லை நம் சொந்தங்கள் அவர்கள் நம்மை தொடும் விதம் அவர்களுக்கு காம பசி இருந்தால் நம்மை தூண்டுதல் அதன் மூலம் தேவையான சுகத்தை அடையுதல் நம்மை வழிதவறி போக செய்தல். சொல்லப்போனால் இதில் சிக்கி அழிந்தவர்கள் பலர் கட்டுப்பாடோடு மீறி வந்தவர்கள் சிலர். இதுவே பொது இடத்தில் நடந்தால் பெரிதாக பேசப்படுகிறது பல இடங்களில் பெற்றவர்களே காரணமாக உள்ளனர்.

 

   இந்த காமம் பல இடங்களில் பல ரூபத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது தனிமையில் இரவு பயணத்தில் பாலினம் ஒன்றாகவும் பாலினம் வேறுபட்டும் அரங்கேறுகிறது இதில் பலர் கட்டாயப்படுத்தப்பட்டு காம தூண்டுதலை ஏவி விடுவதால் சரண்டர் ஆகிவிடுகிறார்கள் காமம் விஸ்வரூபம் எடுப்பதில் வயது பாகுபாடு கிடையாது எப்பொழுது வரும் எப்பொழுது போகும் என்று கணிக்கமுடியாது கால நேரம் கிடையாது. 

 

   கண்சிமிட்டும் நேரத்தில் என்ன நடுக்குமென்று தெரியாது கண்மூடித்தனமானது ஒருமுறை ருசித்து விட்டால் மீண்டும் மீண்டும் ருசிக்கத்தூண்டும் தப்பான பாதைக்கு கொண்டுசெல்லும். இப்படி காமம் விஸ்வரூம் எடுக்க முக்கிய காரணம் நம்மை சுற்றியுள்ள சூழல் மற்றும் நம்மை சுற்றியுள்ள மனிதர்கள். உறவுமுறைகளையும் மீறி பீறிட்டு விஸ்வரூபம் எடுக்கக்கூடியது காமம் நாமாக பார்த்து கட்டுப்படுத்திக்கொண்டாள் உண்டு இல்லை என்றால் அரங்கேறியே தீரும். இது அனைவரது வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்திருக்கும் ஆனால் சொல்ல தயங்குவர் இப்படித்தான் காமம் மனித வாழ்க்கையில் விஸ்வரூபம் எடுக்கின்றன யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. மேலும் காமம் என்றால் ஆண்களை மட்டுமே சித்தரிக்கிறார்கள் அப்படிகிடையாது பெண்களிலும் சில காம தவறு செய்பவர்கள் உண்டு ஆனால் சமூகம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

 

   இவையெல்லாம் சமூகத்தில் திருத்தப்படவேண்டிய விஷயங்கள். நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் காமத்தை பணம் சம்பாரிக்கும் தொழிலாகவே செய்துவருகிறார்கள் . காம சுகத்தால் பலகோடி இழந்த மனிதர்களும் உண்டு. காமத்தின் அடிப்படையில் இணையும் காதல் ஜோடிகள் காலத்தால். காணாமல் அழிந்துபோன பல கதைகளும் உண்டு. பெண்களே ஆண்களின் காம தூண்டுதலுக்கு காரணம் அவர்கள் அணியும் கவர்ச்சி உடைகளே. பணத்தாசை பிடித்த இந்த உலகில் சாதாரண பெண்கள் மட்டும் இல்லை பெரிய இடத்து குடும்பப்பெண்களும் சிலர் பணத்திற்காகவும் வசதி வாய்ப்புகளை எளிதில் பெறவும் ஈடுபடுகிறார்கள். இந்த நவீன காலத்தில் பள்ளியில் சில ஆசிரியர்களும் அரும்பு பிள்ளைகளை கசக்கி பார்க்கிறார்கள். பல உயர்ந்த இடத்தில் அரங்கேறிய தப்பான காம உறவுகளால் மூடி மறைக்க ஆணவ கொலைகளும் அரங்கேறியுள்ளன.

 

   பல மெத்த படித்த பேராசிரியர்களும் கல்லூரி மாணவிகளை காம தொழிலில் ஈடுபடுத்திய சம்பவங்களையும் மறக்க முடியாது. இப்படி காமம் பல கோணத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை அவனது கண்ணோட்டத்தில் பார்த்த நிகழ்வுகள் மற்றும் மீடியாக்களில் பார்த்தது அணைத்து அனுபவங்களையும் மனம் திறந்து சொல்லியுள்ளார். சொல்லப்பட்டவை அனைத்தும் இயல்பான நிகழ்வுகள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உலக வாழ்க்கையில் அனைவரும் இப்படி கிடையாது ஒருசிலரையே சபலபுத்தி உடையவர்கள். சபலம் தவிர்க்கப்பட்டு தேவையானதை சரியான இடத்தில் உரிமையோடு பயன்படுத்தி செயல்பட்டால் அனைத்தும் சுகமே. இப்படி விஸ்வரூபம் எடுக்கும் காமமும் கட்டுக்குள் வந்து வாழ்கை சிறப்பான வழியில் விஸ்வரூபம் எடுக்கும்.


Rate this content
Log in

Similar tamil story from Romance