தலைவர் சிவாஜி
தலைவர் சிவாஜி
தலைவர் சிவாஜி அவர்களிடம் நம் சிவாஜி மன்றத்தினர் அல்லது அவரது நண்பர்கள் தங்களது இல்ல திருமணம் மற்றும் காதணி விழா போன்ற சுபமங்கள விழாக்களில் கலந்து கொள்ள அழைக்கும் போது தனது தம்பி V.C. சண் முகம் மன்றாயர் அவர்களை பார்க சொல்லுவார்கள் ஏன் என்றல் அவர் தான்.
சிவாஜி அவர்களுக்கு படபிடிப்பு நேரம் மற்றும் ஒய்வு நாட்கள் என்ன என்பது தெரியும் மேலும் அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாஜி மன்றத்தினரை நன்கு அறிந்தவர் அவர் முடிவு செய்யும் தேதிகளிலேயே அண்ணன் சிவாஜி அவர்கள் கலந்து கொள்வார் தேதி முடிவானவுடன் யார் அழைத்தார்களே அவர்களை கூப்பிட்டு எங்கே விஷேசம் வைத்துள்ளாய்..... எத்தனை மணிக்கு வரணும் எவ்வளவு பத்திரிக்கை அடிக்க போறே... எத்தனை பேருக்கு சாப்பாடு செய்ய போற..... என்ற விபரங்களை கேட்பார் இப்படி ஒரு வரை விசாரிக்கிறார் என்றால் அவருக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது என்று அர்த்தம் பிறகு அவர்கள் அழைப்பிதழ் அச்சடித்து அண்ணன் சிவாஜி அவர்களுக்கு தருவதற்காக அவரது இல்லத்திற்கு வந்தவுடன் தன் தம்பி சண்முகம் அழைப்பார்.
தன் கண்களாலே ஜாடை காட்டுவார் உடனே அவர் உள்ளே சென்று அண்ணி கமலாம்மாள் அவர்களை அழைத்து வருவார் ( திருமண அழைப்பிதழாக இருந்தால்) வரும் போது ஒரு தாம் பாளத்தில் விலை உயர்ந்தபட்டு வேஷ்டி பட்டுபுடவை மற்றும் 4 கிராம் தங்ககாசு மேலும் கவரில் பணம் வைத்து அழைப்பிதழ் கொடுத்தவரிடம் கொடுத்து விஷேசத்தை நல்லா பண்ணு நான் வந்து விடுகிறேன் என்று சொல்வார்கள் சிலர் சிவாஜி மீது அதிதீவிர பக்தி கொண்டவர்களா இருப்பர் ஆனால் தகுதிக்கு மீறி செலவு செய்பவர்களா இருப்பர் அவர்களுக்கு அந்த ஊரில் உள்ள சிவாஜி மன்ற நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப் பார் அப்போது அவனுக்கிட்ட இதை கொடுத்தால் அவன் வெட்டி செலவு செய்து விடுவான் அதான் உங்களை வரச் சொல்லி கொடுத்தேன் கூட இருந்து விஷேசத்தை நல்லபடியா செய்யுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லுவார்.
4 கிராம் தங்ககாசு அவரவர் மதம் இனத்திற்கு தகுந்தார் போல் தாலி செய்வதற்காக கொடுப்பதை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார் இதில் ஏழை ... பணக்காரன்... உயர்ந்த ஜாதி ..... தாழ்ந்த ஜாதி ..... என்று ஒரு போதும் அவர் பார்த்ததில்லை அவரது இறுதி மூச்சு வரை வஸ்திரதானம் சொர்ண தானம் ( தாலிக்கு தங்கம், ) அன்னதானம் செய்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள் இதையே தான் தன் இனிய நண்பர் மூனா . கானா (மு.கருணாநிதி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் இராமாமிர்தஅம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் என்பதை நடைமுறைபடுத்தினார்.
