anuradha nazeer

Abstract Drama

5.0  

anuradha nazeer

Abstract Drama

தேவதை

தேவதை

1 min
622


ஒரு அழகிய ராஜா ராணி.

 நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு அழகான பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. வாழ்த்துவதற்கு மூன்று அழகிய ஏஞ்சல்ஸ் வந்தது .கூடவே அழையாத விருந்தாளியாக ஒரு கெட்ட   ஏஞ்சலும் வந்தது.

 அந்த   கெட்ட  தேவதைக்கு தன்னை கூப்பிடவில்லை என்று மகா கோபம். அதனால் பெண் குழந்தைக்கு சாபம் இட்டது. நீ உடனே இறந்து விடுவாய் என. 

அதைத் தடுக்க நல்ல தேவதைக்கு பலமில்லை. 

மாற்றாக எவனொருவன் உன்னை இந்த அசிங்கமான முகத்துடன் கல்யாணம் பண்ணி கொள்கிறானோ அப்போ உன் வாழ்க்கை திரும்பி விடும் என வாழ்த்தினர். அந்த பெண் அகோர உருவமாய் மாறுவாய் எனவும் கெட்ட தேவதை சாபம் விட்டது.

இளவரசி கோர உருவம் ஆக 

மாறினாள்.

 நல்ல தேவதைகளுக்கு மனம் மிகவும் வருந்தியது.

 பகலெல்லாம் அசிங்கமாகவும் இரவு மட்டும் மிகவும் அழகாய் இருப்பாய் என்று நல்ல தேவதைகள் வரம் தந்தனர் .

ஒருநாள் எழில்மிகு இளவரசியை ராஜகுமாரன் ரூமிற்கு நல்ல தேவதைகள் கட்டிலுடன் தூக்கி சென்று அங்கு விட்டுவிட்டது.

கண்டதும் காதல் என்பது போல் அழகான இளவரசியை கண்டதுமே காதல் கொண்டான் இளவரசன்.

இரவானதும் அசிங்க முகத்துடன்  மாறினாள்.

 பின் கண்களில் கண்ணீர் மல்க தன் கதையைக் கூறினார் ராஜகுமார் இடம் இளவரசி.

 தந்தையுடன் சண்டை போட்டு. விட்டு அவளையே மனந்தான் ராஜகுமார். இளவரசியை காணாமல் பெற்றோர் துடித்தனர் .

பின் விஷயம் கேள்விப்பட்டு சந்தோஷம் ஆயினர்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract