STORYMIRROR

Mohana B

Abstract Inspirational

5  

Mohana B

Abstract Inspirational

நான் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது...

நான் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது...

2 mins
478

#AnUntoldStory

#MemoryofmySchoolDays


When I was studying in 7th Standard.....💭


நான் படிச்ச அரசுப் பள்ளியில

🏕️5வது வரைக்கும் ஒரு ஓடு போட்ட கட்டிடம்.. 

🏝️6, 7க்கு எந்த மரத்தடில நிழல் இருக்கோ அதான் வகுப்பறை..

⛺8வதுக்கு ஓடு போட்ட சுவர் இல்லாத கட்டிடம். (குதிரைக் கொட்டில் போல)

🛖9வதுக்கு ஓடு போட்ட சுவர் இருக்க பழைய கட்டிடம்.

🏚️10வது மட்டும் கான்கிரீட் கட்டிடம்.


அப்படி இருக்கும் போது அன்றைய தினம் இலுப்பை மரத்தடியில தான் நிழலா இருந்துச்சி. அதனால் அங்க Black board வச்சி எங்களுக்கு Class நடந்துச்சி. ராணியம்மாள் 

டீச்சர் English பாடம் நடத்தனாங்க.


அப்போ தனுசு அண்ணா வந்து மோகனா'வ தமிழ் ஐயா கூப்டாருன்னு சொன்னாரு.


டீச்சர் போக சொல்லி அனுப்பிட்டாங்க.


தனுசு அண்ணா என் அண்ணனோட Close friend. அதனால எனக்கு ஏற்கனவே தெரியும். "அண்ணா ஏன்னா கூப்டாருன்னு கேட்டேன்"

அவர் "தெரில மா" சொன்னாரு.


அமைதியா இருந்த அந்த Class'க்குள்ள ஜல்..ஜல்..னு கொலுசு சத்தத்தோட போய் நின்னதும் "யாராவது புத்தகம் கொடுங்கடா சொன்னாரு!"


முதல் பென்ச்சில் இருந்த ரெண்டு பேர் நீட்ட, நான் நீட்டாமல் வைத்திருந்த ஒருத்தரோட புத்தகத்தை எடுத்தேன்... ஏன்னா அவர் தான் என் Fighting Partner.


ஒரு பக்கத்தைக் கூறி படிக்க சொன்னார் ஆறுமுகம் ஐயா ..


நான் இப்படி நிறுத்தி நிதானமா ஒவ்வொரு வார்த்தையா தான் படிச்சேன்.

👇🏼

திரிகடுகம்


பிறர்தன்னைப்-பேணுங்கால்-நாணலும்-பேணார்

திறன்வேறு-கூறிற்-பொறையும்-அறவினையைக்

காராண்மை-போல-ஒழுகுதலும்-இம்மூன்றும்

ஊராண்மை-யென்னுஞ்-செருக்கு


படித்து முடித்ததும் "இந்த பொண்ணு எப்படி படிச்சிது?!'னு கேட்டார்.


நல்லா படிச்சிது சார்'னு சொன்னாங்க எல்லாரும்.


திரும்பப் படி'னு சொன்னாரு.


அப்பறம் எல்லாரையும் கைத்தட்ட சொன்னாரு.


அந்த முதல் பென்ச்சில இருந்த Fighting Partner கைத்தட்றாரா'னு பார்த்தேன். அவர் மட்டும் தட்டல. Because அவரு என் அண்ணன் Siva Chandran ..😜😝 வீட்டுக்கு வந்தா திட்டுவானோனு பயம் வேற. அவ்ளோ பவ்யமான தங்கச்சியா இருந்திருக்கேன்..🙈 


2 வருஷத்துக்கப்பறம் நான் 9வது படிக்கும் போதும் அதே செய்யுளைப் படித்தேன். இந்த முறை மனப்பாடமாக.. அப்பொழுதும் பொருள் தெரியாது.


அந்த மறக்காத செய்யுளின் பொருள் தெரிந்து கொண்ட பிறகு

அது எப்பவும் மறக்காம ஞாபகம் வச்சிருக்க அளவுக்கு தாரக மந்திரமா மாறிடுச்சி.


Yess..

நான் அடிக்கடி நினைவு கூறும் வரிகள் இவை...


#பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறிற் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகுதலும் - இம்மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.


#பொருள்:

  பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைமாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.


ரொம்ப Lengthyaa இருக்கேனு Feel பண்றவங்களுக்கு

இதோட Simplified version நம்ம இளைய தளபதி சொல்லி இருக்காரு..


Yesss...


உசுப்பேத்தறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்!


என்னைப் போல நிறைய பேருக்கு பொருத்தமான வரிகளா இது இருக்கும்னு நம்பறேன்.


சில நிகழ்வுகள் பொக்கிஷம் போன்றவை... என்றும் மறக்காது நிலைத்திருக்கும்.. 🤩


-ப. மோகனா அய்யாதுரை


Rate this content
Log in

Similar tamil story from Abstract