மறவாதே கண்மணி..
மறவாதே கண்மணி..
கார்த்திக் இந்த மெஸ்ஸேஜ் உனக்கு.... பேரிடியா இருக்கலாம்.... ஆனால் தவிர்க்க முடியவில்லை.....என்றோ சொல்ல வேண்டியது.... உன்னை நேரில் சந்திக்கும் தருணங்கள்... உன் அன்பில் கரைகின்றது.....
நேரில்... உன் கண் பார்த்து.. நான் சொல்வது... முடியாத ஒன்று..... அதனால் எழுதுகிறேன்.... நேற்றைய பொழுது... உன்னை தனிமையில் சந்திக்கும் நோக்கம் ஒன்று தான்.... உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் இந்த ஆயுளுக்கு போது என்று தான் நேற்றைய பொழுது.....உன்னை என் மார்போடு ஏற்று கொண்டேன்.... உன் நினைவுகள் என் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது..... நான் போகிறேன் கார்த்திக்... அப்பாவுக்கு உன்னை பிடிக்காது... உனக்கும் வேலை எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.....
அப்பா காட்டியவனை மணம் முடிக்கிறேன்..... உன் வாழ்க்கையில் நான் இல்லை புரிந்துகொள்வாய் என் நம்புகிறேன்.... பதிலுக்கு உன் வாழ்த்துக்கள் மட்டும் போதும்... என்னை மன்னிச்சிரு... கார்த்திக்..
டியர் பானு... இவ்வளவு காலையில் என் இதயத்தில் ஈட்டியை இறக்குவாய் என நினைத்துக்கூட பார்க்கவில்லை...
வலி ஒரு பக்கம்... நீ இனிமேல் என் வாழ்க்கையில் இல்லையே அந்த கலக்கம்.... ஒரு பக்கம் வேலை இல்லாமல் இல்லையே... உன் வாழ்க்கைக்கு ஏற்ற வேலை இல்லை தான்...இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்று கொள்ள முடியவில்லை...
திருமணம் முன் தொட்டு பேசுவதை கூட தவிர்த்த என்னை.... நேற்றைய பொழுது உன்னோட கலந்து போக செய்தாய்... இது தான் தொடக்கம்... காதலின் உச்சம் என்று நான் நினைத்திருந்தேன்...
இப்போ தான் புரிகிறது நீ என்னோடு வாழ்ந்து முடித்திருக்கிறாய்..என்று....
நீ கேட்ட வாழ்த்தை முதலில் தருகிறேன்.....
நீ வாழனும்...
அதும் நீ என் முன்னாள் காதலியே...
நீ பெரிய வாழ்க்கை வாழ வேண்டும்....
மீண்டும் நான் வருவேன்...
நான் வருவேன்...
பழிவாங்கியே தீருவேன்... உன்னை விட ஒரு படி மேல்
நானும் வாழ்ந்து காட்டுவேன்..
வாழ்ந்து காட்டுவதே சிறந்த பழிவாங்கல்.....
முற்றும்...