மலர்கள்
மலர்கள்


ஒரு தோட்டத்தில் அழகழகான. வண்ண வண்ண மலர்கள். பூத்து மனதைக் கவர்ந்தது.
அதனைப் பார்த்த அனைவருமே என்னமா வண்ண வண்ண பூக்கள் வசந்தத்தில் பூத்திருப்பது போலிருக்கிறதே என்று மெச்சினர்.
வசந்தமும் சென்றது.
அந்த மலர்கள் மத்தியில் அழகான ரோஜாவும் இருந்தது.
. எல்லோரும் ரோஜாவை அற்புதமாக பாராட்டினர்.
ரோஜாவிற்கு . செ று க்கு உண்டாயிற்று .
தலைக்கணம் மட்டும் வரவே கூடாது .
அறிவித்து தனது காரணம்
செருக்கு கொண்ட ரோஜா . மற்ற மலர்கள் இடம் தான் அழகாக இருக்கிறேன் என்று வீண் ஜம்பம் அடித்துக் கொண்டது.
ரோஜா அதைக் கேட்ட மலர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு என்று கூறியது.
ஆனால் ரோஜா இதை ஏற்க மறுத்தது.
ரோஜாவின் ஆணவத்தால் மற்ற மலர்கள் ரோஜாவை வெறுத்து ஒதுக்கியது.
ரோஜாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டது.
ஆனால் ஒரு சப்பாத்திக்கள்ளி மட்டும்
ரோஜாவை
வெறுக்காமல் அன்புடன் எப்போதும். போல் பழகியது.
வசந்தம் முடிந்தது. பின் இலையுதிர் காலம் வந்தது .
அப்போது ரோஜாவின் அழகு மெல்ல தேய ஆரம்பித்தது .
இலைகள் எல்லாம் உதிர்ந்து. காய்ந்து போனது போல் ரோஜாவின் குச்சிகள் அசிங்கமாக இருந்தது.l
குருவிகள் வந்து தனது கூர்மையான அலகால் சப்பாத்திக்கள்ளி குத்திக் குத்தி அதிலிருந்து நீரை பருகி தாகம் தீர்ந்து மகிழ்ந்து சென்றன
இதைப் பார்த்த ரோஜா சப்பாத்திக்கள்ளி இடம் உனக்கு . வலிக்க வில்லையா ? ரோஜா கேட்டது சப்பாத்திக்கள்ளி இடம்
என்ன செய்வது? மற்றவர்கள் சந்தோஷமாய் இருப்பதை பார்க்க வேண்டும் என்றால் நாம் வலியை பொறுத்துக் கொண்டு. தான் ஆக வேண்டும் என்று கூறியது.
அதைக்கேட்ட ரோஜா ஞானம் உற்றது.
தனக்கும். தண்ணீர் தேவை என்று சப்பாத்திக் கள்ளி இடம் சொன்னது .
குருவிகளின். மூலம் சப்பாத்திக். கள்ளி. ரோஜாவிற்கு தண்ணீர் ஊற்றியது ரோஜாவும் செழித்து வளர்ந்தது.
ரோஜாவும் அகந்தை அகன்று தன்னடக்கத்துடன் பொலிவாக விளங்கியது