கடல் கன்னி part6
கடல் கன்னி part6
கடல் கன்னி part6
அப்போது திக்விஜய் எனக்கு மன்னரை அழைத்துச் செல்ல வேண்டும்
மன்னரை வர வேற்க அவரது நாடு காத்திருக்கிறது என்று திக்விஜய் கூறினா மந்திரவாதிக்கு வயதாகி விட்டதால் அவரது மகனையும் நான் அழைத்துப்போக வந்திருக்கிறேன் .இதற்கு உங்களுக்கு என்ன கைமாறு வேண்டும் என்று கடல் அரசனை கேட்டார் திக் விஜய்
இவர்கள் பேசிக் கொண்டே வந்த போது நன்கு இருட்டி விட்டது
உடனே திக்விஜய் தன் கையிலிருந்த மந்திர பொருட்களை எடுத்து அணிந்து கொண்டான் கூடவே கடல் அரசனையும் தோளில் சுமந்து கொண்டு பறந்தான்.
உங்களுக்கு பயமென்பதே கிடையாதா கடல் அரசன் கேட்டார்.
இல்லை வீரனுக்கு பயமென்பதே கனவிலும் கூடாது.
நானெப்போதும் எதற்குமே தயாராய் இருப்பேன் .
உதவியென யார் கேட்டாலும் தயங்க மாட்டேன் செய்வதற்கு.
இதற்குள் கடலரசன் கடல் அரண்மனை வந்து விட்டது .
கடலரசன் கடலுக்குள் வாழ ஒரு பெரிய அரண்மனை கட்டியிருந்தான் .அந்த அரண்மனைக்குள் தான் மன்னனை சிறை எடுத்து வைத்திருந்தான் .
மந்திர பொருட்களின் உதவியால் வெகு சீக்கிரமாக அரண்மனையை அடைந்து அங்கு சிறைக்குச் சென்றனர்.
இளவரசன் இவர்கள் கொடுத்த உணவு பொருட்களை எல்லாம் சாப்பிடாமல் மிகவும் பலவீனமாய் இருந்தான்.
இளவரசே உங்களை அழைத்து போகத் தான் நான் வந்திருக்கிறேன் என்று திக்விஜய் கூறினான்.
இளவரசுக்கு உதவியாக தான் மந்திர வாதியின் மகனை கடலரசன் வைத்திருந்தான்.
இப்போது மந்திரவாதியின் மகனைப் பார்த்து திக்விஜய் நான் உன்னையும் உன் அப்பாவிடம் சேர்த்து விடுவேன் கவலைப்படாதே என்றான்.
பின் கடல் அரசுடன் சமாதானமாக பேசி இருவரையும் மீட்டு கொண்டு திக்விஜய் புறப்பட்டான். எந்த நேரத்திலும் எந்த விதமான உதவியையும் நீங்கள் கேட்கலாம்.
நான் செய்யத் தயாராய் இருக்கிறே ன் .விடைபெற்று புறப்பட்டான் திக்விஜய் .
வழியில் பேசிய படி மந்திரவாதியின் மகனை அவனிடம் ஒப்படைத்து விட்டு நன்றி கூறி விட்டு திக்விஜய் இளவரசனுடன் புறப்பட்டான்.
ஆனால் மந்திரவாதியின் மகனுக்கோ தன் தந்தை செய்த காரியம் பிடிக்கவில்லை. எதற்காக மந்திர பொருட்களை திக்விஜய் இடம் கொடுக்க வேண்டும் என்று.
ஆனால் இது எல்லாம் தெரியாத திக்விஜய் இளவரசுடன் தன் மாய பொருட்களுடன் பறந்து சென்றான்.
அற்புத லோச்சனி யின் அரண்மனைக்குச் சென்று அங்கு அவளது தந்தையை
பார்த்தான் .அவர் கேட்டபடி யார்
மதிப்பு மிகுந்த பொருட்கள் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தான் என் மகள் அற்புத லோச்சனி என்று கூறியிருந்தார் .அதைப்போல அவன் அரிதான மந்திர பொருட்களை ராஜாவிடம் கொடுத்து அற்புத லோச்சனி யை திருமணம் முடித்தான்.
திக்விஜய் கொடுத்த மந்திர பொருட்களை ராஜா பாரம்பரியமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார் அரண்மனையில்.
மந்திர பொருட்களை மீட்க வந்த மந்திரவாதி மகனை வீறு கொண்டு
விரட்டியடித்து விட்டான் திக்விஜய்.
ஆனால் திக்விஜய் இல்லா சமயத்தில் அண்டை நாட்டிற்கு போர் புரிய சென்ற சமயத்தில் பபணியாளர் மூலம் நஞ்சு கொடுத்து விட்டான் பாவி மந்திரவாதி
மகன் .திரும்பி வந்த திக்விஜய் அற்புத லோச்சனியின் பிரிவு தாங்க முடியாமல் கட்டாரியால் தன்னைத் தானே குத்தி கொண்டு மாண்டு விட்டான் .
இந்த ஜென்மத்தில் திக்விஜய் , திலீபனாகவும்
மீன லோச்சனி அற்புத லோச்சனியாகவும் பிறந்து வந்து உள்ளீர்கள்.
உங்கள் திருமணத்திற்கு இனி எந்தத் தடையும் கிடையாது.
நானே சென்று மீன லோச்சனி அப்பாவிடம் பேசி இனிதே நடத்தி வைக்கிறேன்
உங்கள் திருமணத்தை யென்றார்.
எனவே இந்த மந்திர பொருட்களை மீட்பதற்காக மந்திரவாதியின் மகன் இந்த
ஜென்மத்தில் மீண்டும் பிறந்து வந்து காத்திருக்கிறான் .
எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் .
உங்களை எச்சரித்து போகவே வந்தேன் .மந்திரவாதியின் மகன் இப்போது பெரியவன் ஆகி விட்டான் .எனவே இந்த ஜென்மத்தில் உங்களை தேடிக் கொண்டு இருக்கிறான். .அவன் எப்போது வேண்டுமானாலும் வந்து உங்களை தாக்கலாம் என்றாள் கிழவி.
பரவாய் இல்லை.வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றான் திலீபன் .
மீன லோச்சனி வரவிற்காக அவள் அப்பா காத்திருக்க , கிழவி மீன லோச்சனி யுடன் சென்று அனைத்து விஷயங்களையும் கூறினாள்.
இரு நாட்டு மன்னர்களின் முழு சம்மதத்துடன்
திலீபன் மீனலோச்சனி அற்புத திருமணம் இனிதே நிறைவேறியது .
என்ன அருணா ???பகல் கனவா ??? டாக்டரிடம் போய் வருகிறேன்.
அவரென்ன சொன்னார் தெரியுமா ????
நீ இப்ப 3 மாதமாம் .நான்
அப்பா ஆகப் போறேனாம் இன்னும் சில மாதங்களில், எனக் குமார்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே உவ்வே உவ்வே உவ்வே
என குமட்டிக் கொண்டே ஓடினாள் அருணா .
எண்ணங்க கனவு தான் . கடல் கன்னி என் கனவில் ,
என்ன நல்ல சகுனம் . கடல் கன்னி தந்த வரம் இது .