கல்யாணம்
கல்யாணம்


வழக்கம்போல அன்றும் கட்டுமான வேலை செய்துகொண்டிருந்தார் நாராயணசாமி. உயரமான கம்பி ஒன்றைத் தூக்கிப் பொருத்தவேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தக் கம்பி, தலைக்குமேலே சென்றுகொண்டிருந்த மின்கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்தது. இரண்டு கைகளையும் நீக்கவேண்டிய அளவுக்கு விளைவுகள் பெரிதாகின. வாழ்க்கை இருண்டது. காதலித்த பெண்ணின் குடும்பம் நிராகரித்தது. தன்னை நிராகரித்த காதலை ஜெயிக்க வேண்டும்... உயிருக்குயிராகத் தன்னை நேசிக்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் தன்னம்பிக்கையுடன் போராடி ஜெயித்திருக்கிறார் நாராயணசாமி.
நாராயணசாமிக்கு, தமிழகத்தின் முதல் கைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தமிழக மருத்துவத்துறை வரலாற்றில் பெரிய மைல்கல். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பத்தாண்டுக்காலக் காதலிலும் வென்று, காதலி நதியாவை கடந்த ஆண்டு கரம்பிடித்தார். இந்தத் தம்பதிக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
போராட்டங்களையும் சவால்களையும் தோற்கடித்த காதல் கதை.
...மிகச் சவாலான அறுவை சிகிச்சை என்பதால் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து ஓராண்டுக்காலம் மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் மருத்துவக் கண்காணிப்பிலேயே நாராயணசாமி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில், நாராயணசாமி-நதியாவின் காதல் கதையில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை வெட்கத்துடன் பகிர்கிறார் நதியா.
"மின் விபத்துல அவருக்குக் கைகள் நீக்கிய பிறகு அதைக் காரணமா சொல்லி, மீண்டும் எங்க காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. ஆனா, நான் உறுதியா இருந்தேன். இதனால, ரெண்டு வருஷம் அவர்கூட பேசவும், சந்திக்கவும் முடியாத அளவுக்குக் கண்டிப்பான சூழல் எனக்கு..."
இப்போது கல்யாணம் முடிந்து இரு குழந்தைகள் இருக்கின்றன.