இரவின் விடியல்
இரவின் விடியல்
இரவுக்குத்தான் எத்தனை அமைதி வாழ்க்கையிலும் இது போன்ற அமைதி இருக்காதா என்று எங்கும் எத்தனை மனது. இரவில் தான் ஒரு மனிதனின் உண்மையான முகம் வெளிப்படும் என்று நாம் கடந்து வந்த வாழ்க்கை கூறும் . இரவில் தோன்றும் பிம்பங்கள் கூட உண்மையாக தான் தெரியும் நம் கண்களுக்கு .இரவு ஒரு காலம் தான் ஆனால் அக்காலத்தில் தான் தீமைகள் அதிகம் நடக்கும் ஏன் என்றால் இரவுக்கு கண் இல்லை என்று சிலர் வாதம் .இரவுக்கும் அழகான மறுபக்கம் உண்டு இருட்டு ஒன்று இருப்பதால் தான் நிலவின் அழகை நாம் ரசிக்க முடிந்தது .இரவில் தான் பூக்களும் மலர்கிறது மனிதனின் மனதும் சாந்தி கொள்கிறது . இருள் கருப்பு நிறம் பூசி கொண்டு உலா வந்தாலும் கையில்தான் நிலவு என்னும் விளக்கை ஏந்தி நட்சத்திரம் என்னும் புடவை அணிந்து வருகிறாள் ஒரு கருப்பு ராணி போல காண கண்கள் போதாது . ஓவ் வொருவரும் அடுத்த நாள் வாழ்கையில் விடியும் என்ற நம்பிக்கை உடன் தான் இருளை சந்திக்கிறர்கள் அவர்களுக்கான தன்னம்பிக்கையும் இருள் தான் தருகிறது .இருள் கண்ணாடி போன்றது நாம் நினைக்கும் உருவம் அல்லது கேட்கும் சத்தம் கூட நாம் என்ன உணருகிறோமோ அதை தான் அதுவும் பிரதிபலிக்கும் . நம் வாழ்க்கையில் கூட இருள் தான் பயம் என்ற உணர்ச்சியை தூண்டியது பகலில் தைரிய்யாமை சுற்றி வரும் வீட்டில் கூட இரவில் செல்ல நமக்கு ஒரு துணை வேண்டப்படுகிறது . இரவும் எதிர் பார்த்து கொண்டு இருந்தது விடியல் எப்போது வரும் என்று . எதிர் பார்த்து ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கோ அல்லது ஒரு மனிதனின் வருகைக்காகவோ காத்திருக்கும் அக்காலம் தரும் ஓவ்வொரு நிமிடமும் நமக்கு ஒரு புதுயுகம் போலதான் இருக்கும் .
காத்து இருங்கள் இரவின் விடியல் தொடரும் ......