எனது எஜமான்
எனது எஜமான்
என்னை புதைப்பார்கள் ஆ இல்லை நெருப்பிலிட்டு எரிப்பார்கள்ஆ என்று பல வித குழப்பம் என் மனதிற்குள் .
என்னைப் புதைத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது கண்ணீரோடு எனது எஜமான் பேசிய வார்த்தைகள்தான் நான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்! மேலிருந்து குழிக்குள் ஒழுகிவந்த பாலை நக்கிக்கொண்டே நான் நிம்மதியாகக் கண்களை மூட ஆரம்பித்தேன். அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
``பதினைந்து வருஷமா எங்க காலையே சுத்திவந்தது...
ஜெர்ரி மாதிரி நாய் இனி கிடைக்காது!
நாய் நன்றியுள்ளது. எங்க ஜெர்ரி அதுக்கும் மேல!"