சீட்டு, தாயம் விளையாடிய
சீட்டு, தாயம் விளையாடிய
சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு பரவிய கொரோனா
அமராவதி: ஆந்திராவில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களில் சிலர், பொழுதுப்போக்க பயனுள்ள வகையில் ஏதேனும் செய்து வருகின்றனர். சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளனர். சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய சுமார் 39 பேருக
்கு கொரோனா பரவியது. இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட கலெக்டர் இம்தியாஸ் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:
‛‛கிருஷ்ணா லங்காவில் டிரக் டிரைவர் ஒருவர் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடியுள்ளனர். அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கும் கொரோனா பரவியுள்ளது. அதேபோல், கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியது. இதனால், கடந்த 2 நாட்களில் நகரில் சுமார் 40 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதே இதற்கு காரணம்.'' இவ்வாறு அவர் கூறினார்.