விவசாயிகள்
விவசாயிகள்
பனியில் குளிரில்
மண்தரையில் அமர்ந்து
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
இந்திய விவசாயிகள் குடும்பங்கள்
12 நாள்களாக டெல்லியில் போராடுகிறார்கள்.
அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவைகள்.
சேற்றில் கை வைத்து
உழைக்கும் மக்கள்
ஊருக்கு சோறு போடுகிறார்கள்
உயிருக்கு உணவளிக்கிறார்கள்.
நம் உடல் வளர்க்கிறார்கள்
உழவர்கள் வாழ்ந்தால் தான்
நம் வாழ்வு செழிக்கும் வளமாகும்.
