வானவில்
வானவில்
மழை
வரும் முன்னே…
உன்
மகிழ்ச்சியான பிம்பம் கொண்டு…
எல்லோரையும்
மகிழ்ச்சி கொள்ள செய்கிறாய்…
மழைத்துளியின்
பிரதிபலிப்பு தானே…
நீ..!
நினைத்த நேரத்தில்
உன்னை
காண முடியாது…
நீ
தோன்றும் போது
உன்னை
காணாமல் இருக்க முடியாது…
வானத்தில்
நிறங்களை வளைத்து
வில்லென தெரிவதால்
உந்தன் பெயர்
வானவில்லோ…!