STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

திருக்குறள் 35. துறவு (341-345) - மு .வா உரையுடன்

திருக்குறள் 35. துறவு (341-345) - மு .வா உரையுடன்

1 min
213

341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


மு.வரதராசனார் உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


342. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.


மு.வரதராசனார் உரை:

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.


343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.


மு.வரதராசனார் உரை:

ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.


344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.


மு.வரதராசனார் உரை:

தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.


345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.


மு.வரதராசனார் உரை:

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.


Rate this content
Log in

Similar tamil poem from Classics