பெண்ணே...!
பெண்ணே...!
உனக்கான நேரம்
கொடுக்காத போதும்,
சலிக்காமல் நடிக்காமல்,
உறவாடும் உனைக் கண்டு
வியக்கின்றேன்......!
உனக்காக ஒருபோதும்
உயிர்க்காத என் நொடிகள்,
விதைக்கின்ற வலிகளை
உணர்கின்றேன்......!
மறுக்காமல் எனை நீயும்
உனதாக்கிக் கொண்டாய்..
சிலிர்க்காமல் என்செய்ய,
துடிக்கின்றேன்.....!