ஒன்றே லட்சியம்
ஒன்றே லட்சியம்
என் வாழ்வில் ஏன் இத்தனை தடுமாற்றங்கள்; இதை யாரிடம் உறக்க கூறுவேன்,
இன்னும் எத்தனை காலம் இப்படி என் வாழ்நாட்கள் நகர போகின்றன,
ஏதோ ஒரு குரல் என் செவியில் மெல்லமாக சொன்னது, நீ சாதிக்க பிறந்துள்ளாய்.
எங்கே இருந்து ஒலித்தது அந்த குரல், ஆர்வம் கொண்டு தேடினேன் எட்டு திசையிலும்,
அந்த குரலை எங்கோ கேட்ட நினைவு, நன்கு தெரிந்த ஒரு உணர்வு என்னை வாட்டியெறிந்தது,
சிறுபிள்ளை முதல் இன்று வரை நான் காணாத தோல்விகளே இல்லை.
இனியாவது எண்ணுவது நிறைவேறுமா என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் தோன்றும்,
அந்த நொடி திரும்ப அந்த குரல் செய்வில் ஒலிக்கும், வெற்றி நிச்சயம் என்ற எண்ணம் உதிக்கும்,
நினைவுக்கு வந்தது அது என் தந்தையின் குரல், அவர் நினைவு மட்டுமே இன்று உள்ளது,
ஆனாலும் அவர் அன்பு வார்த்தை இன்னும் என்னை வெற்றியின் நுழைவாயிலில் அழைத்து சென்றுள்ளது,
அவரின் கனவை நிறைவேதும் செல்ல மகளாக வாழ்வதே என் லட்சியம்.