மறு வாழ்க்கை
மறு வாழ்க்கை
வாழ்வில் எல்லாம் இருந்தும்,
எதுவுமே இல்லாமல் போனது,
அவன் தந்த காதல் ஏமாற்றத்தினால்,
அப்போது தான்,
நீ வந்தாய்,
என் வாழ்வினில்,
எதன் மீதும் பற்று இல்லாதவளிடம்,
ஆனால்
நான் இழந்ததை எல்லாம்,
உன் உருவில்
எனக்கு கிடைத்திருக்க செய்திருக்கிறாய்,
என்பதை எண்ணும் போது,
இந்த மறு வாழ்க்கையும்,
ஆனந்தமாய் தான் மாறிப் போய் இருக்கிறது...

