என் அருமை பேரன்
என் அருமை பேரன்
குட்டி கண்ணா குழந்தை வடிவே
குலக்கொழுந்தே... குதூகலத்தின் ஊற்றே!
என் முகம் வாடினால் பொறுக்க மாட்டாய்
நீ கண் கலங்கினால் நான் பொறுக்கமாட்டேன்.
பெற்றோர் உன்னை கடிந்தால்
நீ தஞ்சம் புகுவது என்னிடம் அன்றோ!
உன் அபரிமிதமான ஆங்கிலமும்,
அனைத்தயும் நொடியில் புரிந்துகொள்ளும்
உன் ஆற்றலும்
நான் வியக்காத நாளில்லை.
ஒரு நாளில் என் பெயரை அதிகம் உச்சரிப்பது நீதான்!
என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் அன்பே,
உன்னைப் பேரனாய் பெற்றதில்
நான் பிறவிப்பயன் அடைந்தேன்!