என் ஆசினின் கனவு
என் ஆசினின் கனவு
பிறந்த ஊரை காண செல்கிறேன் மனதில் ஒரு வித மான உணர்வு,
வருடங்கள் முப்பது ஓடின இன்னும் என் மனதில் எண்ணங்கள் மாறவில்லை,
கடந்து வந்த பாதை பெரியது இருப்பினும் என் அன்பு ஆசான் போல ஒருவரை கண்டதில்லை,
என் தந்தை தான் என் ஆசான் அவர் மண்ணின் மைந்தன்,
என் ஆசான் ஏர் உழுவது போல ஒரு வரும் உழுவ முடியாது,
அவரின் கம்பிர நடையும் ஆழமான சிந்தனைக்கும் யாவரும் ஈடு இல்லை,
என் வாழ்வின் மிக கடினமான தருணத்திலும் என்னை அயல் நாட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் உழவு மேற்கொண்டார்,
இப்போது நான் என் கனவு நாயகன் ஒரு சிறந்த விவசாயி அவரை பார்க்க செல்கிறேன்,
விவசாயி தான் ஆனால் அவர் என்றும் என் ஆசான்,
பயிரை விதைத்து அதை குழந்தை போல பராமரித்த,
ஒரு போதும் அந்த பயிர்களை கை விடாமல் உறுதுணையாக இருக்கும் என் ஆசான் போன்ற அனைத்து விவசாயிகளும் தெய்வங்கள் தான்,
உணவு எண்ணும் ஒன்றை மட்டும் அல்ல விவசாயி தான் இந்த பூமியின் ஆணி வேர்,
இயற்கை சக்கரத்தை காக்கும் மா மனிதர்கள் விவசாயி,
அப்படி போன்ற ஒரு விவசாயி என் ஆசான் அவரை பார்க்க வந்தேன் நாடு கடந்து நான் இன்று,
அன்பு தந்தையின் முகம் கடைசிக் முறை பார்த்து விட்டேன் இனி நானும் அவரின் ஆசை அறிந்து விவசாயி ஆக போகிறேன் இன்று முதல்,
ஆசான் கனவு மெய்யாக விவசாயம் வாழ்க இந்த உலகம் உள்ளவரை.