ஏலியன்
ஏலியன்
உன்னை
பார்க்கும் போதெல்லாம்,
தோன்றும் உணர்வு,
உந்தன்
செய்கைகளை
காணும் போதெல்லாம்,
தோன்றும் உணர்வு,
உந்தன் வார்த்தைகளுக்கும்,
உந்தன் செய்கைகளுக்கும்,
வித்தியாசத்தை உணரும் போது,
தோன்றும் உணர்வு,
நீ
நல்லவனா?
இல்லை
கெட்டவனா?
என குழம்பி
தவிக்கும் போதும்,
தோன்றும் ஒரே உணர்வு,
நீ
வேற்று கிரகத்திலிருந்து,
வந்த ஏலியனோ,
என்பதுதான்....
