அவள்
அவள்
தன்னையே அறியாமல் தனக்குள் வந்தவனை தூக்கி எறிய தவித்துக் கொண்டிருந்தாள் // அவனுக்கோ உயிர் இருக்குமோ? வலி எடுக்குமோ? என்று பல யோசனைகள்// இதைக் கூறினால் போய்விடுவானோ இல்லை எதை கூறினால் போவான் என பல ஒப்பனைகள் // தான் உணர்ந்த பிரிவின் வேதனையை அவனும் உணர வேண்டுமா என பல ஆலோசனைகள் //
தன்னை தண்டிக்க வந்தவனிடம் தயக்கமின்றி தாயைப் போல் அன்பு பாராட்டினாள் //
தாமதம் இன்றி அவன்சொல்லும் போதெல்லாம் அழுதாள்//
தன்னடக்கமே இல்லாதவனிடம் தன்னைத் தானே அடிமையாக எழுதிக் கொடுத்து விட்டாள்//
தண்டிக்க வந்தவனுக்கே தலைசுற்றி போனது இவளது தன்மையை கண்டு //
தண்டிக்க வந்தவனை கூட தரிசனத்திற்காக ஏங்க வைத்தால்//
தன்னை அறியாமல் அவளை தண்டிக்க வந்தவனிடம் கூட தாகத்திற்கு தண்ணீர் தான் மருந்தார் போல் காதலை ஊட்டினாள் தனிமையின் காதலுக்காக....