STORYMIRROR

Kirthana Kamalakannan

Tragedy Classics Others

4  

Kirthana Kamalakannan

Tragedy Classics Others

அது ஓர் கனாக்காலம் !

அது ஓர் கனாக்காலம் !

1 min
358

● கார்மேகங்கள் கடல்போல் சூழ

வண்டுகளின் ரீங்காராம் தான் ஒலிக்க,

நினைவுகள் அலைப்போல பாய்ந்திட, 

அது ஓர் கனாக்காலம்..........................

● மேகம் கார்குழலியாக விரிந்திட;

கண்களில் நீர்தான் சொறிந்தது.

முதல் தூறல் என்னை வந்து தீண்டிட, 

மெய்சிலிர்த்து சிலையாகி நான் போனேன்! 

● பிஞ்சு விரல்களால் மழைநீரை எண்ணிட,

  முடியாமல் தோற்ற காலம் அது.

  அதை எண்ணி ஒருமுறை பார்க்கையிலே 

  மனதோரம் சிறு புன்னகை தோன்றி மறைந்தது! 

● அளவில்லா காகித கப்பல்களை செய்து 

  கர்வத்துடன் ஓட்டிய காலம் அது! 

  கர்வம் முழுமை அடைவதற்குள்,

  மழை கப்பல்களை மூழ்கடித்த காலம் அது! 

● இடியுடன் மழைதான் பெய்தாலே 

  அர்ஜுனா - என துதித்த காலம் அது !

  துதித்த அடுத்த ஒருகணமே;

  இடி காணாமல் போன கனாக்காலம் அது.

● மழை தன் வருகையை கூறிடவே, 

  மண் வாசம் முன்னே தந்திடுமே !

  அதனை ஒருமுறை முகர்கையிலே, 

  பேரானந்தம் எங்கிருந்து வந்திடுமோ ?

● பாட்டி மடியில் படுத்தபடி, 

  மழையினை ரசித்த காலம் அது.

  அளவில்லா மழை நீரினைப்போல் 

  மணிக்கணக்கினில் கதைத்த கதைகள் 

                                - பல உண்டு! 

● மழையினை இரசித்த காலங்கள் தான், 

            கண்முன் வந்து போகையிலே! 

  நினைத்து ஒருமுறை புன்னகைப்பதற்குள்,

  மழையோ வேகம் எடுத்ததே! 

● குளிர்ந்த மழையில் நனைந்தபடி;

     வீதியின் ஓரம் நான் நடக்க, 

  என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க, 

   செய்வதறியாமல் நான் தவித்தேன்!!

● இருநீரை வேறுபடுத்த தெரியாத

             மழலையாய் சாலையில் நடக்கையிலே! 

   வாழ்வின் கோணங்களை எண்ணியபடி,

   மனதின் நினைவுகள் மழையில் கரைந்தபடி,

   கால்கள் வீட்டை நோக்கி நடைப்போட்டதே !

 


   



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy