இதய வார்த்தைகள்
இதய வார்த்தைகள்
"குலேபகாவலி"...
The Thousand and one night ...கதை திரைப்படம் ஆனது. வேட்டைக்கு செல்லும் அரசர் புலியிடம் சிக்கிக்கொள்ள அவரை முதல் தாரத்தின் பிள்ளையான M.G.R காப்பாற்றுகிறார். அரசரின் கண்களில் விஷச்செடியின் பால் பட்டதால் அவர் பார்வையிழக்கிறார். அவரின் பார்வையை திரும்பப்பெற "பகாவலி" நாட்டிலுள்ள "குலேப்" மலரின் சாரை கண்ணில் விட வேண்டும் என்று மருத்துவர் கூற அதை தேடி M.G.R புறப்படுகிறார். பல்வேறு போராட்டங்களை சந்தித்து புலியோடு சண்டையிட்டு மலரை எடுத்து வருகிறார்.
பிறகு நடப்பதே மீதிக்கதை. "ஆசையும் என் தேகமும் ரத்த... "சொக்கா போட்ட நவாப்பு செல்லாது... "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... போன்ற இனிய பாடல்கள் மனதை மயக்குகிறது.சண்டைக்காட்சிகளில் புலி போல சீறிப்பாய்கிறார். வரலாற்றில்.அவர் தான் சகலகலா வல்லவன் இன்று என்றும்.இந்த வயதில் கூட உணர்சி பூர்வமான சண்டையும்[நடிப்பு].. நூறுநாட்களும்கொட்டகைநிறைந்தகாட்சி வசூலில் மகத்தான சாதனை புரிந்த படம்.. இரசிகர்களையும் தொண்டர்களையும் ஒரு தைரியத் தலைவனாகவும் நல்ல மனிதனாகவும் வழி நடத்தினார். இவை இதய வார்த்தைகள். சில பேர் தோண்றுவது தெய்வச் செயல் இவரின் தோற்றமும் அப்படி தான்....
