அழகின் ஆச்சரியம்
அழகின் ஆச்சரியம்
கொட்டும் மழையினில்
குடைக்குள் தேவதையாக
கண்முன்னே வந்தாள்
வெளிச்சம் மங்கிய இரவில்
நிலவொளியாய் வீசினாள்
வில்லெனும் விழியால்
என்னை நோக்கினால்
உள்ளத்தில் அலைகள்
ஆர்ப்பரிக்கின்றன
சந்தமில்லா என் பாட்டை
மென்னகையால் இசைகிறாள்
பிரம்மனின் படைப்பில்
அழகின் ஆச்சரியம் அவள்.