வழி போக்கன்
வழி போக்கன்
ஒரு ராஜாவுக்கு திடீர் கவலை நாம செத்துட்டா நாட்டை யார் பாத்துப்பாங்க .
ராணியார் எல்லோரையும் நல்லவர் என நம்பும் குணம் படைத்தவர் . இளவரசர்கள் வாலிபவயது வந்தும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறார்கள் ..
எதிரிகள் நடமாட்டம் வேறு தெரிகிறது .
ஒருநாள் நாம இல்லை என்றால் அவ்வளவுதானா
தன் கவலையை மனைவி மகன்களிடம் கூறினார் . . . அவர்கள் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் உங்களுக்கு நீண்ட ஆயுள் என்றனர் . பயப்படாதீங்க நாட்டை நாங்க பாத்துக்கிறோம் என சொல்ல வாய் வரவில்லையே என அடுத்த கவலை தொற்றியது .
அந்ந நேரம் ஒரு ஞாநி அரண்மனை வந்தார் . தன் வேதனையை அரசர் கூறினார் .
" மன்னா உங்களது கவலை நியாயமானதுதான் நீங்கள் சிறிதுகாலம் தேசாந்திம் போய் வாருங்கள் . . . போகும் போது . . . நான் திரும்ப வரலாம் வராமலும் போகலாம் இனி எனக்கும் இந்த நாட்டிற்க்கும் எந்த பந்தமும் இல்லை . என அவர்களிடம் கூறி செல்லுங்கள் .அப்படியே செய்தார் .
அரமணையில் இருந்து வெளியேறிய ராஜாவுக்கு இவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள ஆவல் வரவே நாட்டுக்குள் மாறு வேடத்தில் வந்து கவனித்தார் .
மன்னர் இல்லாமல் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை .
எந்த மாற்றமும் தெரியவில்லை அவரவர் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர் . மன்னர் மக்கள் மனதை அறிய நினைத்தார் .
" ஐயா மன்னர் தேசாந்திரம் சென்றது கவலை அளிக்கவில்லையா " என கேட்க .
" மன்னர் அவரது குடும்பத்தினர் பற்றிய மனக்கவலையை போக்க போயுள்ளார் . அதற்க்காக நான் கவலை பட்டால் என் குடும்பம் என்னாவது " என ஒருவர் சொல்ல
இது போல் பலரிடம் விசாரித்து மக்களுக்கு தன்னை பற்றிய கவலையில்லை சரி நம் மனைவி மக்களுகள்தான் பாவம் என நினைத்த மன்னர் அரண்மனை வாசலில் போய் நின்றார் வாயல்காப்பான் யாருமில்லை உள்ளே சென்றார் தடுப்பார் இல்லை . . . அரசபைக்கு சென்றார் மந்திரி பிராதிநிதிகள் யாருமில்லை . . . உள்ளே சத்தம் கேட்கவே என்னவென்று எட்டிப்பார்த்தார் .
அரசரின் கிரீடம் மற்றும் ஆபாரணங்கள் எனக்குதான் . . . இல்லை எனக்குத்தான் என பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் .
மேலும் கஜானா யாருக்கு சொந்தம் என சண்டை . . .
ராஜாவின் வாள் மட்டும் தனியாக கிடந்தது .
சரி ராணி என்ன செய்கிறார்
என கவனித்தார் ராணியார் நல்ல உறக்கத்தில் இருந்தார் .
எப்பத்தான் எழுந்திருக்கிறார் என பார்ப்போம் என காத்திருந்தார் .
" தாயே கண்களை திறக்கலாம் . . . கிரீடம் ஆபாரணம் கஜானா சாவி எல்லாம் எனக்கு கிடைத்து விட்டது " என ஒருமகன் ஓடி வர
" தாயே கண்ணை திறக்காதீர் எனக்கு எதும் தராமல் எல்லாம் பிடுங்கி வந்து விட்டான் இந்த வாள்தான் எனக்கு கிடைத்தது " என இன்னோரு மகன் சொல்ல
" நான் கண்களை திறக்கிறேன் . . ." என்றபடி இருவருக்கும் அறிவுரை வழங்கினாள் .
உங்களது தந்தையைப்போல் அனைத்தையும் நீங்களே வைத்துக்கொள்ள கூடாது . கடுமையாக வாதிட்டு யார் எதற்க்கு தகுதியானவர் என்பதை நீங்களே உணர வைத்து விட்டேன் .
மகன்களே கிரீடம் ஆபாரணம் கஜானா சாவி கொண்டு வந்தவன் காஜானாவை நிர்வாகிக்க தகுதியானவன் .
வாளை கொண்டுவந்தவன் மக்களை காப்பாற்ற பெறுப்புள்ளவன் ஆகவே இப்போதே இருவரும் சென்று ஏனோதானோன்னு இருக்கிற அரசு ஊழியர்களை சரி செய்யுங்கள் .
அரசு ஊழியரை சரி செய்தால் அனைத்தும் சீராகும் அரசாங்கமும் சீராகும் . மக்களை வரியில் நடக்கும் ஆட்சி இது மக்களுக்கான ஆட்சி . . .
அப்ப தேசாந்திரம் போன தந்தையார் .
அவர் வரும் போது வரட்டும் . என ராணியார சொன்னதும்
ராஜாவின் கண்களை ராணியார் திறந்து விட்டார் .
ராஜா அரண்மனையை விட்டு வெளியேறினார் இனி இந்த நாட்டுக்கு நாம் தேவையில்லை என்று உணர்ந்தவராய் நடக்கலானார் வழியில் ஞாநி நின்று வரவேற்றார் .
நாமேல்லாம் இந்த உலகத்தின் வழிப்போக்கன்கள் உலகத்தில் எதும் நிரந்தரமில்லை .
