துறவி
துறவி
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவருக்கு பல சிஷ்யர்கள் .அந்தத் துறவி கோபப்பட மாட்டார்.எனவே அவருடைய சீடர்கள் அதன் ரகசியத்தை அறிய விரும்பினா ர். . ஒருநாள் ஒரு சீடன் கேட்டான். எப்படி உங்களுக்கு கோபமே வருவதில்லை. குரு சொன்னார். ஒரு நாள் ஒரு படகில் நான் அமர்ந்து ஆழ்நிலை தியானம் செய்து கொண்டு இருந்தேன்.
அப்போது எதிரில் இருந்த ஒரு வெற்றுப் படகு, என் படகு மீது மோதி என் கவனத்தை கலைத்தது.. மிகவும் கோபத்துடன் கண் திறந்து பார்த்தேன்.அந்த வெற்றுப் படகு காற்றின் வேகத்தினால் எனது பலகை எடுத்து என் தவத்தை கலைத்தது... அந்த படகின் மீது கோபப்பட்டு என்ன செய்வது /அன்றிலிருந்து நான் யார் மீதும் கோபப்படுவதில்லை ...என்னை யாராவது சீண்டினால் அது வெறும் வெற்றுப் படகு என்று நினைத்துக்கொள்வேன். இதுதான் ரகசியம் என்றார்.