STORYMIRROR

arvind narayanan

Action

4.5  

arvind narayanan

Action

துப்பாக்கி

துப்பாக்கி

4 mins
7

துப்பாக்கி

ஆதித்யா எட்டு வயது சுட்டி பையன்,இந்த வருட தீபாவளிக்கு நிஜ துப்பாக்கியை  போல ஒரு பொம்மை துப்பாக்கி வாங்கி தருகிறேன் என்று ஆதித்யா அப்பா அவிநாசி சொல்லியிருந்தார். தீபாவளியை எதிர்நோக்கி ஆர்வமாக காத்திருந்தான் ஆதித்யா.

அவிநாசி கோயம்புத்தூர் காவல் அதிகாரி, பிடிக்கவே முடியாத பல வழக்குகளை சிரமப்பட்டு பிடித்தவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பவர். அதனால் எதிரிகளுக்கு பஞ்சமில்லாதவர். பாதுகாப்பிற்காக ஓர் கை துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார். இது போக அலுவலத்தில் கொடுத்த துப்பாக்கியும் உண்டு.

ஆதித்யாவிற்கு அந்த துப்பாக்கியின் மேல் தான் கண் எப்போதும். விபரீதம் அறியாத அவன் அதை எப்படியாவது எடுத்து சுட்டு பார்க்க வேண்டுமென்று தீவிர ஆர்வம். அவர்கள் வீட்டில் உள்ள இரண்டு துப்பாக்கியும் ஒரே மாதிரியாக இருக்கும். அதே போல ஒரு பொம்மை துப்பாக்கி தீபாவளி சந்தையில் கிடைத்தது அதை வாங்கி தருவதாக தான் கூறியிருந்தார் அவிநாசி.

இன்னொரு பக்கம் நாஞ்சில் நாதன் தன் குடும்பத்தை இழந்து தனி மரமானவன். அது விபத்து இல்லை கொலையென தெரிந்தும் நீதி மன்றத்தில் நீதி கிடைக்காமல் குற்றவாளி தப்பித்தததை எண்ணி கடும் கோவத்தில் இருந்தவன். கொலை செய்தவன் நரேன் என்ற அரசியல்வாதியின் கூட்டாளி, எப்படியாவது வெளியில் ஒரு கள்ள துப்பாக்கி வாங்கி அவன் குடும்பத்தை கொன்றவனை  கொல்ல வேண்டும் என்ற வெறி அவனுள் இருந்து கொண்டே இருந்தது. அவனின் கள்ள துப்பாக்கி தேடுதலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இன்னொரு புறம் ப்ரியா, இந்த காலத்து புதுமை பெண் மிக தைரியசாலி பத்திரிகையாளர், இதுவரை கொலை மிரட்டல் பல வந்துள்ளன அவளின் எழுத்துக்களுக்கு. இரண்டு முறை அசம்பாவிதத்திலிருந்து தப்பி இருக்கிறாள். பாதுகாப்பிற்காக ஒரு கை துப்பாக்கி வாங்க licesnce க்கு விண்ணப்பித்திருக்கிறாள்.  

தீபாவளி நாளும் வந்தது ஆதித்யாவிற்கு நிஜ துப்பாக்கி போல இருக்கும் அந்த பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்தார் அவிநாசி அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அது ஒரு அழகிய அட்டைப்பெட்டியில் பாதுகாப்பாக உள்ளே வைத்து பேக் செய்யப்பட்டிருந்தது. அதை வைத்து "டிஷ்யூம் டிஷ்யூம்" என்று சுட்டு தள்ளி கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் அனைவருக்கும் காண்பித்தான், அவர்களும் அதை ஆச்சிரியமாக பார்த்தனர். ஆதித்யாவின் நெருங்கிய தோழன் அருண் அவனுக்கும்  அந்த துப்பாக்கி மேல் ஆசை அதை ஆதித்யாவிடம் சொல்ல. நான் எங்க அப்பாகிட்ட கேட்டு வாங்கி தரேன் என்று சொல்லியிருந்தான்.

தீபாவளி முடிந்து ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்று கிழமை அருணின் பிறந்த நாள், அவனுக்கு பிறந்த நாள் பரிசாக அந்த பொம்மை துப்பாக்கியை வாங்கி தர வேண்டும் என்று ஒரே அழுகை. சரி சின்ன பையன் தானே ஆசை படறான் வாங்கி தருவோம் என்று வாங்கி கொடுத்தார் அவிநாசி.அந்த பொம்மை துப்பாக்கி அட்டைப்பெட்டியில் பேக் செய்து வீட்டிற்கு வந்தது அதை பரிசு  பொருள் போல பேக் செய்ய சொல்லி அவன் அம்மாவிடம் கேட்டு கொண்டிருந்தான் ஆதித்யா. அவளும் செய்து தரேன் என்று  சொல்லிவிட்டு அவள் வேலையில் மும்முரமானாள்.

இன்று அருணின் பிறந்த நாள் மாலை அவன் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தான். Gift pack  பண்ணிகொடுக்க சொல்லி அம்மாவை மீண்டும் நச்சரித்தான். அவிநாசி அந்த நேரத்தில் வீட்டிற்கு வர நானே செய்து தரேன் குளிச்சிட்டு வரேன் என்று சொல்லி போய்விட்டார். அந்த நேரத்தில் வாசலில் உட்கார்ந்திருந்த ஆதித்யாவின் பாட்டி நடக்க முடியாமல் கீழே வழுக்கி விழ தலையில்  அடிபட்டு ஒரே ரத்தம். அவிநாசி ஓடி வந்து உடனடியாக மருத்துவமனை கூட்டி சென்றார். ஆதித்யாவின் அம்மாவோ உறவினர்களுக்கு அலை பேசியில் அழைத்து நடந்த சம்பவத்தை சொல்லி கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் எப்போதும் பாதுகாப்பாக தன் துப்பாக்கியை பூட்டி வைக்கும் அவிநாசி அலமாரி கதவை பூட்டாமல் சென்றுவிட்டார். இது தான் சமயம் என்று நிஜ துப்பாக்கியை எடுத்து அந்த பொம்மை துப்பாக்கி அட்டையில் வைத்துவிட்டு. பொம்மை துப்பாக்கியை எடுத்து அப்பாவின் இடத்தில் வைத்துவிட்டான் ஆதித்யா. நண்பன் வீட்டிற்கு சென்றதும் அதை ஒரு முறை சுட்டு பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு. அம்மாவிடம் மீண்டும் நச்சரிக்க, "இவன் வேற நேரம் காலம் தெரியாமல்" என்று புலம்பிக்கொண்டே என்னவென்று பார்க்காமல் கிபிட் பேக் செய்து கொடுத்தாள் ஆதித்யாவின் அம்மா.

மதியமானது அருணிடமிருந்து அழைப்பு வந்தபடி இருந்தது, அவிநாசி மருத்துவமனை சென்று வந்துவிட்டார் சின்ன அடி தான் தையல் போட்டிருக்கு தூங்கட்டும் என்று கூறியிருந்தார், அவசர வேலையாக அலுவலகத்திலிருந்து அழைப்பு வர போலீஸ் உடை மாற்றிக்கொண்டு அந்த பொம்மை துப்பாக்கியை கவனிக்காமல் எடுத்து சென்றார்.

மாலையானது ஆதித்யா அவன் அம்மாவை நச்சரித்து கொண்டே இருந்தான், நண்பன் அருண் வீட்டிற்கு போக வேண்டுமென்று. மாமியாரை பார்த்து கொள்ள சொந்தக்காரர் ஒருவரை அமர்த்திவிட்டு வண்டியில் ஆதித்யாவை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் அந்த பரிசு பொருளுடன்.

பாதி வழியில் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பூ மார்க்கெட்டை தாண்டி செல்லும்போது பூ வாங்க வேண்டும் என்று நினைப்பு வந்து அவள் வண்டியை ஓரங்கட்டினாள், "பூ வாங்கிட்டு போலாம் கண்ணா" என்று ஆதித்யாவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றனர்.

அதே நேரத்தில் அருகில் உள்ள சந்தையில் கள்ள துப்பாக்கி அரசாங்கத்திற்கு தெரியாமல் விற்கப்பட்டதை அறிந்து நாஞ்சில் நாதன் ஏற்கனவே பணத்தை கொடுத்து வைக்க, அவன் பணத்தை வாங்கிக்கொண்டு பொருள் இல்லாமல் திருப்பி அனுப்பினார்கள். பணமும் போச்சே என்று நொந்து கொண்டு பூ மார்க்கெட் பக்கம் அவர் நடந்து வர. அவன் குடும்பத்தை கொன்ற வாலிபன் நரேன் தனியாக மார்க்கெட்டில் இருப்பதை கவனித்துவிட்டார். துப்பாக்கி இல்லையென்றால் என்ன இன்று எப்படியாவது இவனை கொன்று விட வேண்டும் என்ற மறைமுகமாக பின் தொடர ஆரம்பித்தார்.

நரேன் தனியாக இருந்தாலும் அவன் கண்கள் ஒரு இளம்பெண்ணை குறி வைத்திருந்தது, அந்த இளம்பெண் ப்ரியா. சில அரசியல் காரணத்திற்காக அவளை கொலை செய்ய அவனுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரியா பூ கடையில் பூ வாங்கி கொண்டிருருந்தாள் அது ஒரு பெரிய கடை, முன்னால் பூ விற்பதும் பின்னால் ஒரு அலுவலக வேலை செய்யவும் பொருள்களை வைக்க இடமும் உண்டு.அதே கடையில் ஆதித்யாவும் அவன் அம்மாவும் நிற்க. ப்ரியா பின்னால் சென்று தாக்க முயன்றான் நரேன், அவள் சுதாரித்து கொண்டு யாரென்று பார்க்க, கையில் கத்தியுடன் ஆதித்யா கழுத்தில் வைத்து, "மரியாதையாக எங்களை பற்றி எடுத்த ஆதாரங்களான pen drive கொடு இல்லைனா இந்த பையனை கொன்னுடுவேன்" என்று மிரட்டினான்.

சுற்றி ஒரே அலறல் சத்தம், ஆதித்யா அம்மாவிற்கு என்னசெய்வதென்று புரியவில்லை, ஆதியவோ கதறுகிறான். ஆதித்யாவை அந்த பூ கடைக்குள் பின்னாடி உள்ள ஒரு அறை போல உள்ள இடத்தில்  தள்ளி விட அவன் கையில் வைத்திருந்த பரிசு பொருள் சற்று தள்ளி விழுந்தது, ப்ரியாவை பிடித்து அந்த கடையில் உள்ளே தள்ளி ஷட்டர் மூடும் நேரத்தில், அடியில் புகுந்து உள்ளே வந்தார் நாஞ்சில் நாதன். நரேனுக்கும் நாஞ்சில் நாதனுக்கும் மிக பெரிய சண்டை நடக்க, வெளியில் ஆதித்யாவின் அம்மா அவிநாசிக்கு தகவல் கொடுக்க, ப்ரியா எப்படியாது தப்பிக்க முயல  அவளையும் அடிக்க ஆரம்பித்தான் நரேன்.

ஆதித்யாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் முழிக்க, நாஞ்சிலுக்கும், ப்ரியாவிற்கும் அடி விழுந்தபடி இருந்தது நரேனிடமிருந்து. ப்ரியா தள்ளி போய் அந்த பரிசு பொருள் பக்கத்தில் விழ அது சற்று திறந்திருந்தது தூக்கி எறிந்ததில். துப்பாக்கி என்று தெரிந்ததும் நிஜ துப்பாக்கி போல இருந்ததால் உடனே எடுத்து அவன் முன் நீட்டி மிரட்டினாள்.

"சின்ன பசங்க துப்பாக்கி வைத்து என்னை மிரட்டுறியா" என்று ஆவேசமாக அவள் மேலே பாய அவள் துப்பாக்கியை அமுக்க தோட்டா அவன் தலையை துளைத்தது. உடனே கீழே சரிந்தான். ப்ரியாவிற்கும், நாஞ்சில் நாதனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆதித்யா பயத்தில் உறைந்தே போய்விட்டான்.துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே மக்களும் பரபரப்பாகினர்.

விஷயமறிந்து அவிநாசி வந்து ஷட்டர் கதவு திறந்தார். ஆதித்யா பயந்து நடுங்கி அவரை போய் கட்டிக்கொண்டான். நாஞ்சில் நாதன் தான் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார், ப்ரியா நாஞ்சில் நாதனை நன்றியுடன் பார்த்தாள். அவர் துப்பாக்கி எப்படி அங்கே வந்தது என்று அவர் யோசிக்க பயத்துடன் ஆதித்யா உண்மையை சொன்னான். ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்கு உதவியது என்றாலும் ஒரு கொலையை பார்த்த ஆதித்யா மிகவும் பயந்து போனான். இனி துப்பாக்கியை பற்றி யோசிக்க கூட அவனுக்கு பயம் வந்தது.

ப்ரியா நடந்த சம்பவத்தை அரசியல்வாதி பின்னணிகளை பத்திரிகையில் போட்டு நல்ல பெயர் எடுத்தாள். ப்ரியாவும் அவிநாசியும் போராடி நாஞ்சில் நாதனை விடுதலை செய்தனர். 

துப்பாக்கிசுடும் சத்தம் மட்டும் இன்னும் ஆதித்யாவின் மனதிலிருந்து நீங்கவில்லை.


Rate this content
Log in

Similar tamil story from Action