தற்பெருமை
தற்பெருமை
பக்தன் ஒருவன் கோவிலுக்கு அர்ச்சனை தட்டுடன் கிளம்பினான்
தட்டில் தேங்காய், வாழைப்பழம் ,கற்பூரம் ஆகியவை இருந்தன .தேங்காய் தற்பெருமைக்காக நான் மிகவும்
கெட்டியானது என்றது. வாழைப்பழம் நான் மிகவும் இனிமையானவன் இளமையானவன் என்றது .
கற்பூரம் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தது. கோவிலுக்குள் சென்றதும் அர்ச்சகர் தேங்காய் உடைத்தார் .
வாழைப் பழத்தை உரித்தார் .கற்பூரத்தை ஆண்டவன் சன்னிதானத்தில் தீபாராதனை காட்டினார்.
பக்தர்களாகிய நாம் கற்பூரம் போல் அமைதி காத்தால் நன்மையே நடக்கும்.
தேங்காய் போல இறுமாப்புடன் இருந்தாலும் உடைபடுவோம் . வாழைப்பழம் போல் இனிமையாக அருமையாக இருந்தால் கிழி படுவோம்.